நாங்கதான் மங்களகரமான கூட்டணி.. இலை, பூ, மாம்பழம் இருக்கே.. தமிழிசையை அடிச்சுக்க ஆளே இல்லப்பா!
எங்களுடையது மங்களகரமான கூட்டணி என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை: இலை, பூ, மாம்பழம் எல்லாம் ஒன்றாக சேர்ந்துள்ளதால் நாங்கள் மங்களகரமான கூட்டணி என்று ஒரு பெரிய விளக்கம் அளித்துள்ளார் தமிழிசை சவுந்தராஜன்.
பாஜக தலைவர் அமித்ஷா இன்று மதுரை வருகிறார். 18 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்து பேச இருக்கிறார். அவரை வரவேற்பதற்காக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை சென்றிருக்கிறார். அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது:

அன்புக்கூட்டணி
தமிழகத்தில் அதிமுக - பாஜக- பாமக என வலுவான கூட்டணி அமைந்துள்ளது. எங்கள் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாகவும் இருக்கிறது. ஏனென்றால் இது அன்பால் இணைந்த கூட்டணி. அதனால்தான் தேமுதிக விரைவில் எங்களுடன்வர இருக்கிறது.

விஜயகாந்த்
தேமுதிக மக்கள் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவர்கள். அதனால் அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். ஆனால் விரைவில் விஜயகாந்த் இந்த அன்புக் கூட்டணிக்கு வருவார்.

மங்களகரமான கூட்டணி
வரும் 26-ம் தேதி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் தாமரை தீபம் நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இதுமட்டுமல்லாமல் இலை, பூ, மாம்பழம் இணைந்துள்ளதால் நாங்கள் மங்களகரமான கூட்டணி" என்றார்.

வைகோ
இறுதியாக மத்தியில் நல்ல திட்டங்களை கொண்டு வரும் அரசு இருக்கும் போது வைகோ எதுக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டும்? மக்கள் வைகோவை எப்பவுமே மன்னிக்க மாட்டார்கள்" என்று கடைசியாக ஒரு பஞ்ச் வைத்து முடித்தார் தமிழிசை.












Click it and Unblock the Notifications