கல்லுமண்டையன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்! 12 ஆண்டுகள் போராடிய குருவம்மாள்! மனித உரிமை ஆணையம் அதிரடி
மதுரை: வெள்ளத்துரையால் கடந்த 2010ஆம் ஆண்டு மதுரையில் என்கவுண்டர் செய்யப்பட்ட முருகன் என்ற கல்லுமண்டையனின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கல்லுமண்டையன் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் ரூ.3 லட்சத்தை காவல்துறை அதிகாரி வெள்ளத்துரையிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் என அலையாய் அலைந்து திரிந்து இந்த தீர்ப்பை பெற்றிருக்கிறார் கல்லுமண்டையன் தாயார் குருவம்மாள்.
இது தொடர்பாக விவரம் வருமாறு;

கல்லுமண்டையன்
கவியரசு, முருகன் என்ற கல்லுமண்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இராமநாதபுரம் சாலை செக்போஸ்ட் அருகே, அப்போதைய காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளதுரையால் கடந்த 16.02.2010 ஆம் தேதியன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து கல்லுமண்டையனின் தாயார் குருவம்மாள் மனித உரிமை செயற்பாட்டக அமைப்பான, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிறுவனர் ஹென்றி திபேனிடம் இது குறித்து முறையிட்டு சட்ட உதவி கோரினார்.

12 ஆண்டுகளாக
இதனிடையே கடந்த 14.02.2010 அன்று நள்ளிரவில் வீடு புகுந்த சீருடை அணியாத 6 காவலர்கள், உன் மகன் எங்கே எனக் கேட்டு சித்ரவதை செய்ததோடு, வாய் கூசும் அளவிற்குக் கெட்ட வார்த்தைகளால் தன்னை திட்டியதாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் எழுத்துப்பூர்வ புகார் மனு அளித்திருந்தார். மேலும், மக்கள் காணிகாணிப்பகம் அமைப்பின் வழக்கறிஞர்கள் அளித்த சட்ட உதவிகளை கொண்டு 12 ஆண்டுகளாக நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் என மகனின் என்கவுண்டருக்கு நீதி கேட்டு நடந்தார் குருவம்மாள்.

சட்டப் போராட்டம்
இந்த சட்ட போராட்டப் பயணத்தில் முதல் நாளிலிருந்து தீர்ப்பு வந்த நாள் வரை மக்கள் கண்காணிப்பகம் குருவம்மாளுக்கு ஆதரவாக நின்று வருகிறது. தொடர்ச்சியான 12 ஆண்டு கால கடுமையான போராட்டத்திற்கு பின் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், வெள்ளத்துரையால் கடந்த 2010ஆம் ஆண்டு மதுரையில் என்கவுண்டர் செய்யப்பட்ட முருகன் என்ற கல்லுமண்டையனின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

வெள்ளத்துரை
கல்லுமண்டையன் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் ரூ.3 லட்சத்தை காவல்துறை அதிகாரி வெள்ளத்துரையிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல் சம்பவம் நடந்த போது சார்பு காவல் ஆய்வாளர்களாக இருந்த தென்னரசு, கணேசன் ஆகிய இருவரிடமும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையம்
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ஆஜராகி குருவம்மாளுக்காக வழக்கை சிறப்புடன் நடத்திய மூத்த வழக்கறிஞர் சின்னராசா தலைமையிலான வழக்கறிஞர்கள் பாண்டியராஜன், சதீஷ், ராஜ்குமார்,நாகேந்திரன், முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு மக்கள் கண்காணிப்பகம் மதுரையில் வைத்து பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications