Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்லுமண்டையன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்! 12 ஆண்டுகள் போராடிய குருவம்மாள்! மனித உரிமை ஆணையம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: வெள்ளத்துரையால் கடந்த 2010ஆம் ஆண்டு மதுரையில் என்கவுண்டர் செய்யப்பட்ட முருகன் என்ற கல்லுமண்டையனின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

கல்லுமண்டையன் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் ரூ.3 லட்சத்தை காவல்துறை அதிகாரி வெள்ளத்துரையிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளாக நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் என அலையாய் அலைந்து திரிந்து இந்த தீர்ப்பை பெற்றிருக்கிறார் கல்லுமண்டையன் தாயார் குருவம்மாள்.

இது தொடர்பாக விவரம் வருமாறு;

கல்லுமண்டையன்

கல்லுமண்டையன்

கவியரசு, முருகன் என்ற கல்லுமண்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இராமநாதபுரம் சாலை செக்போஸ்ட் அருகே, அப்போதைய காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளதுரையால் கடந்த 16.02.2010 ஆம் தேதியன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து கல்லுமண்டையனின் தாயார் குருவம்மாள் மனித உரிமை செயற்பாட்டக அமைப்பான, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிறுவனர் ஹென்றி திபேனிடம் இது குறித்து முறையிட்டு சட்ட உதவி கோரினார்.

12 ஆண்டுகளாக

12 ஆண்டுகளாக

இதனிடையே கடந்த 14.02.2010 அன்று நள்ளிரவில் வீடு புகுந்த சீருடை அணியாத 6 காவலர்கள், உன் மகன் எங்கே எனக் கேட்டு சித்ரவதை செய்ததோடு, வாய் கூசும் அளவிற்குக் கெட்ட வார்த்தைகளால் தன்னை திட்டியதாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் எழுத்துப்பூர்வ புகார் மனு அளித்திருந்தார். மேலும், மக்கள் காணிகாணிப்பகம் அமைப்பின் வழக்கறிஞர்கள் அளித்த சட்ட உதவிகளை கொண்டு 12 ஆண்டுகளாக நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் என மகனின் என்கவுண்டருக்கு நீதி கேட்டு நடந்தார் குருவம்மாள்.

சட்டப் போராட்டம்

சட்டப் போராட்டம்

இந்த சட்ட போராட்டப் பயணத்தில் முதல் நாளிலிருந்து தீர்ப்பு வந்த நாள் வரை மக்கள் கண்காணிப்பகம் குருவம்மாளுக்கு ஆதரவாக நின்று வருகிறது. தொடர்ச்சியான 12 ஆண்டு கால கடுமையான போராட்டத்திற்கு பின் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், வெள்ளத்துரையால் கடந்த 2010ஆம் ஆண்டு மதுரையில் என்கவுண்டர் செய்யப்பட்ட முருகன் என்ற கல்லுமண்டையனின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

 வெள்ளத்துரை

வெள்ளத்துரை

கல்லுமண்டையன் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் ரூ.3 லட்சத்தை காவல்துறை அதிகாரி வெள்ளத்துரையிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல் சம்பவம் நடந்த போது சார்பு காவல் ஆய்வாளர்களாக இருந்த தென்னரசு, கணேசன் ஆகிய இருவரிடமும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையம்

மனித உரிமைகள் ஆணையம்

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ஆஜராகி குருவம்மாளுக்காக வழக்கை சிறப்புடன் நடத்திய மூத்த வழக்கறிஞர் சின்னராசா தலைமையிலான வழக்கறிஞர்கள் பாண்டியராஜன், சதீஷ், ராஜ்குமார்,நாகேந்திரன், முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு மக்கள் கண்காணிப்பகம் மதுரையில் வைத்து பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+