மதுரையில் கொரோனாவால் இறந்தவர் வாழ்ந்த தெருவுக்கு சீல்.. தெருவாசிகளும் தனிமை
மதுரை: மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர் வசித்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த தெருவுக்குள் நுழைவோர் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்து வருகிறார்கள்.
ஈரோட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் 3 தாய்லாந்து நாட்டினரிடம் இருந்து மதுரையைச் சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் நேற்று முன் தினம் இரவு மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலை மோசம்
இதையடுத்து அவருக்கு நேற்று மாலை முதல் உடல்நிலை மோசமானது. அவர் நுரையீரல் அடைப்புக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார். அது போல் அவருக்கு ரத்தக் கொதிப்பும், சர்க்கரை அளவும் கட்டுப்பாடில்லாமல் இருந்தது.

இறுதிச் சடங்கில் 4 பேர்
இதையடுத்து அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வர மதுரை மருத்துவமனையில் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடலை மதுரையில் உள்ள ஜமாத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இந்த சடங்குகளில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தெருவுக்கு சீல்
இதையடுத்து இறந்த நபர் வசித்து வந்த அண்ணாநகரில் உள்ள தெருவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள எல்லார் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்படுதலுக்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் அந்த தெருவில் உள்ள மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அது போல் அந்த தெருக்குள்ளேயும் யாரும் செல்லக் கூடாது.

கிருமிநாசினிகள்
எனினும் அந்த தெருவுக்குள் செல்ல சிலர் போலீஸாருடன் வாக்குவாதம் நடத்தினர். அப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அவர்கள் கேட்காததால் போலீஸார் தடியடி நடத்தினார். முன்னதாக அந்த தெருவில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினிகளை தெளித்து சுத்தம் செய்தனர்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications