மதுரையில் ரூ.46 லட்சம்.. 52 சவரன் நகை கொள்ளை... கூரியர் ஊழியர் போல் நடித்து துணிகரம்
Recommended Video
மதுரை: மதுரையில் கூரியர் ஊழியர் போல வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் உரிமையாளரை கை,கால்களை கட்டி போட்டு ரூ.46 லட்சத்தையும், 52 பவுன் நகையையும் கொள்ளையடித்துச் சென்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
மதுரை மேல அனுப்பானடி சின்னகண்மாய் அரவிந்த் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 67). இவர் ஒரு பள்ளிக்கூட நிர்வாக கமிட்டி உறுப்பினராகவும், மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் அவரது வீட்டிற்கு இரு நபர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தவாறு வீட்டின் கதவை தட்டி கொரியர் ஊழியர் என கூறிய நிலையில் வெற்றிவேலின் மனைவி கதவை திறந்தபோது வாயில் டேப்டை வைத்து அடைத்தவிட்டு வெற்றிவேல் மற்றும் அவரது மனைவி, மருமகள் அணிந்திருந்த 52 பவுன் நகையையும் , வீட்டின் முதல் தளத்தில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 46 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டபகலில் கூரியர் ஊழியர்கள் வேடத்தில் கொள்ளை சம்பவம் நடந்தேறியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை நடைபெற்ற இடத்தில் போலீசார் கைரேகை நிபுணர்களுடன் தற்போது விசாரணை நடத்தி வருவதோடு அப்பகுயில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தடயங்களை மறைக்க வேண்டும் என்பதற்காக மிளகாய்பொடிகளை தூவிவிட்டு சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிளில் முன்பும், பின்பும் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததும், கொள்ளையர்கள் இருவரும் சுமார் 30 வயதுடையவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், தொழில் அதிபர் வீட்டில் பணம் வைத்திருக்கும் இடத்தை நன்கு அறிந்தவர்கள்தான் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications