மதுரையில் பரபரப்பு! திருப்பரங்குன்ற தீபம் விவகாரம்.. விபரீத முடிவை எடுத்த இளைஞர்! தீக்குளித்து பலி
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இது தொடர்பாக இரு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இதற்கிடையே திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்பதால் மன உளைச்சலில் இருந்த இளைஞர், விபரீத முடிவை எடுத்துள்ளார். அங்குள்ள பெரியார் சிலை அருகே அவர் தீக்குளித்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றப்படும். அது வழக்கமாக அங்குள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும். ஆனால், கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என ராம ரவிக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஆணையிட்டார். இருப்பினும், உச்சி பிள்ளையார் கோயிலுக்கு அருகிலேயே இந்தாண்டு தீபம் ஏற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் இப்போது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளது. முதலில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரதான வழக்கின் மேல்முறையீடு. இதை நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரிக்கிறார்கள்.
இதற்கிடையே மலை உச்சியில் தீபம் ஏற்றவில்லை என்பதால் மன உளைச்சலில் இருந்த இளைஞர் தவறான முடிவை எடுத்துள்ளார். மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே போலீஸ் பூத்திற்குள் சென்று இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்..
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் மதுரை மாநகர் நரிமேடு மருதுபாண்டியர் தெரு பகுதியைச் சேர்ந்த பூர்ண சந்திரன் (40) என்பது தெரிய வந்தது. எம்பிஏ பட்டதாரியான இவர், மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் வேலை செய்து வந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தாலேயே இந்த முடிவை எடுத்தாக சொல்லி, அந்த இளைஞர் ஆடியோ ரெக்கார்டு செய்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டே இந்த விபரீத முடிவை எடுத்தாக சொல்லப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
திமுக அரசின் மதவெறியால் தீபத்தூணிற்கு பதிலாகத் தீப்பிடித்து எரியும் தமிழர்கள்!
— Nainar Nagenthran (@NainarBJP) December 18, 2025
திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட, தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகத் திமுக அரசு அதை செயல்படுத்த மறுத்ததைக் கண்டித்து, மதுரை நரிமேடு பகுதியைச்… pic.twitter.com/LPgvRmdOuN
அவர் அங்குள்ள போலீஸ் பூத்திற்கு சென்று, உள்ளே பூட்டிக்கொண்டு தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது.. அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் தீயை அணைத்து இளைஞரைக் காப்பாற்ற முயன்றனர். மேலும், இது குறித்துத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை அணைத்து இளைஞர் சடலத்தை மீட்டனர். இளைஞரின் சடலம் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications