ஆவேசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்
மதுரை: ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் யானை தெய்வானை ஆக்ரோசபட்டு காளிமுத்து என்ற பாகனை மிதித்தது. அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் ஆறுபடை வீடுகளில் முதல்படை ஆகும். இந்த கோயிலில் தெய்வானை என்ற யானை உள்ளது. அந்த யானைக்கு பாகன்களாக காளிதாசன், ராஜேஷ் ஆகிய உள்ளனர். இவர்கள் இருவரும் தினமும் யானையை பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் கோயில் யானையை குளிக்க வைக்க காளிதாஸ் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென யானை தெய்வானைக்கு மதம் பிடித்தது. ஆக்ரோஷமான தெய்வானை பாகன் காளிதாஸை திடீரென தூக்கி வீசி மிதித்தது. இதில் காளிதாஸ் படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பாகன் காளிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மற்றொரு பாகனான ராஜேஸ் யானை தெய்வானை கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கட்டி வைத்தார். திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை ஆக்ரோஷமாக நடந்து கொள்வது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் மதுரை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பாகன் காளிதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications