துக்ளக் இதழின் சர்க்குலேஷன் மேனேஜர் சசிகலா... குருமூர்த்தி பரபரப்பு பேச்சு
மதுரை: துக்ளக் இதழ் முன்பைக்காட்டிலும் இப்போது அதிக பிரதிகள் விற்பனையாகிறது என்றும், சசிகலா தான் அதற்கு சர்க்குலேஷன் மேனேஜர் எனவும் பேசியுள்ளார் அந்த இதழின் ஆசிரியர் குருமூர்த்தி.
மதுரையில் நடைபெற்ற துக்ளக் இதழ் வாசகர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவிடம் பத்திரிகை அதிபர்களும், செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களும் பவ்யமாக நின்றதை பார்த்த போது தான், ஒரு புதிய முயற்சியை முன்னெடுப்போம் எனத் தனக்கு தோன்றியதாக தெரிவித்தார்.

வாசகர் சந்திப்பு
துக்ளக் இதழ் வாசகர்களுடனான சந்திப்பை வாரம் ஒரு ஊரில் நடத்தி வருகிறார் அதன் ஆசிரியர் குருமூர்த்தி. சென்னை, திருச்சியை தொடர்ந்து மதுரையில் நேற்று அந்த நிகழ்ச்சியை நடத்தினார். அதில் துக்ளக் இதழ் வாசகர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். சிறப்பு பேச்சாளர்களாக மூத்த பத்திரிகையாளர் மாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குருமூர்த்தி பெருமிதம்
பத்திரிகை துறைக்கு தன்னை அழைத்து வந்த பெருமை ராம்நாத் கோயங்காவை சேரும் என்றும், அவரிடம் இருந்து தான் எழுதுவதையே கற்றுக்கொண்டதாகவும் கூறினார். மேலும், எழுதுவதை வைத்து பணம் சம்பாதிக்க கூடாது என்ற கொள்கையை தாம் பின்பற்றுவதால், பணத்தை கண்ணில் பார்க்க முடிகிறேதே தவிர அதை செலவு செய்ய முடியாத நிலை தான் உள்ளது என நகைச்சுவை ததும்ப தெரிவித்தார்.

புதிய முயற்சி
சோ மறையும் வரை துக்ளக் இதழின் ஆசிரியராக பொறுப்பேற்பேன் என தாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும், பத்திரிகை அதிபர்களும், செய்தி ஆசிரியர்களும் சசிகலாவுக்கு வணக்கம் செலுத்த போயஸ் கார்டனுக்கு போய் நின்ற அவலம் தமிழகத்தில் அரங்கேறியதாகவும் கூறினார். இந்த அவல நிலையை போக்க வேண்டும் என்பதற்காகத் தான் ஒரு புதிய முயற்சியை தாம் முன்னெடுத்ததாக தெரிவித்தார்.

உரிமை
பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதைக்கும், உரிமைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்றும், வெறுமனே பெண்களுக்கு உரிமையை கொடுப்பது பற்றி மட்டும் பேசாமல் அவர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவது பற்றியும் பேசவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications