3 கிளஸ்டர்கள்.. ஆணை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. 1,391 கோடி கடன் வழங்குவதாக வங்கிகள் உறுதி!
மதுரை : மதுரையில் நடக்கும் MSME தென் மண்டல மாநாட்டில் தமிழ்நாட்டில் மூன்று மைக்ரோ கிளஸ்டர்களை அமைப்பதற்கான ஆணைகளை வெளியிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 13 வங்கிகள் சுமார் 1,391 கோடி ரூபாய் கடன் வரம்புடன் TN TReDS திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு மாத காலத்தில் TN CGS திட்டத்தின் கீழ் 81 எம்.எஸ்.எம் நிறுவனங்களுக்கு லட்சம் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தொழில் நிறுவனங்கள் மாநாடு
தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தென்மண்டல அளவிலான மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

1391 கோடி கடன்
இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின், TAICO வங்கியின் Flu கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோருக்கு கடன்களை வழங்கினார். இந்த FLY கடன் திட்டமானது, சிட்கோ தொழிற்பேட்டைகளில் ஒதுக்கீடு பெற்றதன் அடிப்படையில் தொழில்முனைவோருக்கு கடன்களை வழங்குகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், 13 வங்கிகள் TN TReDS-ஐ செயல்படுத்தும் வகையில் ரூபாய் 1,391 கோடி கடன்களை அறிவித்துள்ளன.

மைக்ரோ கிளஸ்டர்
தமிழ்நாட்டில் மூன்று மைக்ரோ கிளஸ்டர்களை அமைப்பதற்கான ஆணைகளை வெளியிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
1. டாய்ஸ் கிளஸ்டர், விளாச்சேரி, மதுரை
2.தூத்துக்குடியில் ஹியாசிந்த் எனும் நீர்தாமரை கிளஸ்டர்
3. பெண்கள் நெசவு கிளஸ்டர், ராஜபாளையம், விருதுநகர்
ஆகிய கிளஸ்டர் திட்டங்களை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

சிட்கோ
கரூர் மாவட்டம் புஞ்சைக்களக்குறிச்சி, ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த சிட்கோ கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். மேலும், மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.600 கோடி மதிப்பில் 5 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஒரே மாதத்தில்
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் எளிதில் பெரும் வகையில் டி.என்.சி.ஜி.எஸ் என்கிற திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தேன். இந்த ஒரு மாத காலத்தில் இத்திட்டத்தின் கீழ் 81 எம்.எஸ்.எம் நிறுவனங்களுக்கு லட்சம் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

1 ட்ரில்லியன் பொருளாதாரம்
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்கி தமிழகத்தின் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். 2030க்குள் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைக்க தொழில் வளர்ச்சியை எட்ட ஊக்குவிக்கிறோம். எளிதாக தொழில் துவங்கும் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் 3வது இடத்திற்கு முன்னேற வேண்டும்." என தொழில் நிறுவனங்களை கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications