ஆர்ப்பரித்து வரும் வைகை.. மாமதுரையே மிரளுதே! டவுனுக்குள்ள போறீங்களா? கொஞ்சம் கவனமா இருங்க மக்களே!
மதுரை: தேனி வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மழையும் பெய்து வருவதால் மதுரை வைகையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மதுரையில் இணைப்பு பாலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தேனியில் உற்பத்தியாகும் வைகை ஆறு ஐந்து மாவட்ட மக்களின் பாசன மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது.

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு கம்பம் போடி போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது.
வைகை அணை: அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் வைகை அணையிலிருந்து ஏற்கனவே மதுரை திண்டுக்கல் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் தேவை மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் வைகை அணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் போக பாசன தேவைக்காக நேற்று முதல் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு: இந்த நிலையில் வைகை ஆற்றங்கரை ஓர பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை மாநகர் வைகையாற்று பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து தண்ணீர் வர தொடங்கியுள்ளதோடு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை மொத்தம் 915 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. வைகை அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளம்: தொடர்ந்து மதுரை மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தில் 3 நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக வரக்கூடிய மழை நீரும் வைகை ஆற்றில் கலந்து வருவதால் நீரின் வேகம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மதுரை மாவட்ட வைகை ஆற்று பகுதியில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஓட தொடங்கியுள்ளது. எனவே வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு தடை: மேலும் கால்நடைகளை ஆற்றிற்குள் இறங்க அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பால் யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்திற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். 3 தரைப்பாலங்கள் மற்றும் வைகை கரையோரம் உள்ள அணுகு சாலையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றை ஒட்டி அமைந்துள்ள மீனாட்சி அரசு கல்லூரி சாலையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications