2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 வயது குழந்தையின் மூளையில் காசநோய் ஏற்பட்டதை அடுத்து மதுரை அரசு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர்.
காசநோய் என்பது மைக்கோ பாக்டீரியா எனும் நுண்ணுயிரியின் தாக்குதலால் ஏற்படுகிறது. இது பொதுவாக நுரையீரலைத் தாக்கி எலும்புகள், சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பகுதிகளிலும் ஏற்படக் கூடும்.
காசநோயால் பலர் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய் மூளையில் மிகவும் அரிதாக வரும். அது 2 வயது குழந்தைக்கு வந்துள்ளது. எனினும் அக்குழந்தைக்கு மதுரை மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்து அசத்தியுள்ளனர்.

சிகிச்சை
இது குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டி செய்தியாளர்களிடம் கூறுகையில் மதுரை அரசு மருத்துவமனையில் 2 வயதுடைய குழந்தைக்கு உலகிலேயே இல்லாத வகையில் மூளையில் காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கண்டறிய முடியவில்லை
திண்டுக்கல் மாவட்ட சிறுமலை பகுதியை சேர்ந்த தம்பதி சங்கர் , சோலையம்மாள் தம்பதிக்கு 2 அரை வயதில் பரமேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில் இவர் உடல் மெலிந்து குறிப்பிட்ட நோய்களின் அறிகுறிகள் இல்லாமல் நோயுற்றுள்ளார். இதனால் தனியார் மருத்துவமனையில் நோயின் தன்மையை கண்டறிய முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

மூளையில் காசநோய்
அதனை தொடர்ந்து சிறுமலை பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தின் உதவியோடு பரமேஸ்வரி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு பரிசோதனைகள் செய்தும் குழந்தையின் நோயினை கண்டறிய முடியவில்லை. பின் மருத்துவர்கள் குழந்தையின் நிலையை முழுமையாக கவனித்து வந்ததில் பரமேஸ்வரிக்கு மூளை பகுதியில் காசநோய் உள்ளது தெரியவந்துள்ளது.

தரமான சிகிச்சை
உலகிலேயே யாருக்கும் காசநோய் மூளையில் ஏற்படாத வகையில் பரமேஸ்வரிக்கு ஏற்பட்டதை நினைத்து மருத்துவர்கள் வியந்துள்ளனர். பரமேஸ்வரிக்கு காசநோய் தொடர்பான சிகிச்சை அளித்துள்ளனர்.

6 மாதங்கள்
தொடர்ந்து சிகிச்சையில் குழந்தைக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் மருதுபாண்டி மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் நந்தினி குப்புசாமி தெரிவித்தனர். மேலும் பரமேஸ்வரிக்கு தொடர்ந்து 6 மாதங்கள் கவனித்து முழுமையாக குணமடைய சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications