மோடிக்கு கருப்பு கொடி காட்றது பெருமையா.. இல்லை கடமை.. திருப்பூரிலும் களம் இறங்கும் வைகோ!
திருப்பூர் வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தினை வைகோ அறிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை: பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்றதெல்லாம் என்ன பெருமையா? கடமை... என்கிற ரேஞ்சில் இறங்கி விட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
பிரதமர் என்றதும் தமிழகத்தில் ஒரு அரசியல் உருவம் நம் கண் முன் வந்து நிற்கிறார் என்றால் அது வைகோதான்.
அந்த அளவுக்கு கடந்த சில மாதங்களாகவே எதிர்த்து வருகிறார். மோடியின் டிரஸ்-ல் ஆரம்பித்து ஒவ்வொரு விஷயத்தையும் உள்ளே இறங்கி தூர் வாரிப்போட்டு விமர்சித்தும் வருகிறார்.

நாசமா போயிடும்
இதுவரை மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் வைகோவின் கருப்பு கொடி போராட்டம் ரொம்ப ஃபேமஸாகவும், வைரலாகவும் போனது. கடந்த முறை மதுரைக்கு பிரதமர் வருவதற்கு முன்னேயே, "தப்பித் தவறி மோடி ஆட்சிக்கு மட்டும் வந்துட்டா, இந்த நாடு நாசமா போயிடும் என்கிற கவலை எனக்கு ரொம்பவே இருக்கிறது.

சிஐடிகளாலும் முடியாது
மதிமுக சார்பில் எனது தலைமையில் கருப்புக்கொடியை அவருக்கு காட்டுவேன். கருப்பு பலூனையும் பறக்கவிடுவோம். சிஐடி-களும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து பலூனை பறக்க விட போகிறோம்" என்று தெறிக்கவிட்டு பேட்டி கொடுத்தார் வைகோ.

மதுரையில் கருப்பு பலூன்
அதன்படியே செய்தும் காட்டினார். மதுரைக்கு மோடி வந்தபோது வைகோ தலைமையில் மதிமுகவினர் கருப்புக் கொடி, பலூன் காட்டி மிரள வைத்தனர். இந்நிலையில், நாளை தமிழகம் வரப்போகும் பிரதமருக்கு மீண்டும் கருப்பு கொடியை காட்டுவேன் என்று ஆணித்தரமாக சொல்கிறார் வைகோ.

கருப்பு கொடி
மதுரை அழகர்கோவிலில் மதிமுக தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வைகோ கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கருப்பு கொடி போராட்டம் பற்றி சொன்னதாவது:

இது என் கடமை
"தமிழகத்திற்கு கணிக்க முடியாத பல துரோகங்களை செய்திருக்கிறார். அதை கண்டித்து கருப்புக் கொடி என் தலைமையில் காட்டப்படும். திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு கருப்புக்கொடியை காட்ட உள்ளோம். அரசியல் ரீதியாக மோடியை எதிர்ப்பதும், பிரதமர் வரும்போது கருப்பு கொடி காட்டுவதும் தமிழகத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை" என்றார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications