மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'நீட் தற்கொலைகள்.. நரேந்திர மோடி அரசே முழு பொறுப்பு..' பாஜகவை வெளுத்து வாங்கிய திருமாவளவன்

Google Oneindia Tamil News

மதுரை: நீட் தேர்வு தற்கொலைக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசே அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ள திருமாவளவன் எம்பி, நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மீது பாஜக காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதாகவும் திமுக நீட் தேர்வுக்கு எதிராக எந்தவொரு அரசும் செய்யாத வகையில் சிறப்பான சட்ட முன் வடிவ திமுக அரசு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Recommended Video

    நீட் தற்கொலைகள்.. நரேந்திர மோடி அரசே முழு பொறுப்பு.. பாஜகவை வெளுத்து வாங்கிய திருமாவளவன்

    மதுரையில் 'சனாதனம் பெண்களை ஒடுக்கும் கருத்தியல் என்கிற புத்தகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்டார். இந்நிகழ்வில் கொளத்தூர் மணி, பாலபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது செய்தியாளரிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் நீட் தொடர்பான தற்கொலைகளுக்கு மத்திய அரசே காரணம் என விமர்சித்துள்ளார்.

     நீட்: எடப்பாடி காட்டிய ஆ.ராசாவின் 'அயோக்கியத்தனம் பேச்சு' பக்கா எடிட்டிங்- அம்பலப்படுத்தியது திமுக! நீட்: எடப்பாடி காட்டிய ஆ.ராசாவின் 'அயோக்கியத்தனம் பேச்சு' பக்கா எடிட்டிங்- அம்பலப்படுத்தியது திமுக!

    மத்திய அரசே பொறுப்பு

    மத்திய அரசே பொறுப்பு

    இது தொடர்பாக தொல்.திருமாவளவன் கூறுகையில், "அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்தாண்டு நீட் தேர்வால் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். நீட் தேர்வு தற்கொலைக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசே அரசே பொறுப்பு ஏற்க வேண்டும்.

    வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட முன் வடிவு

    வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட முன் வடிவு

    தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட முன் வடிவைக் கொண்டு வந்ததுள்ளது இந்தியாவுக்கே முன்னுதாரணமாக அமைந்துள்ளது. மருத்துவ கல்விக்காக மாணவர்கள் அச்சப்படக் கூடாது. மருத்துவம் படித்தால் தான் வாழ்க்கை என்கிற பிரம்மையில் இருந்து மாணவர்கள் வெளியே வர வேண்டும். மத்திய அரசு நீட் தேர்வை முற்றாகக் கைவிட வேண்டும் எனத் தமிழக மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    பாஜக காழ்ப்புணர்ச்சி

    பாஜக காழ்ப்புணர்ச்சி

    நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மீது பாஜக காழ்ப்புணர்ச்சியுடன் பேசுகிறது. திமுக நீட் தேர்வுக்கு எதிராகத் தேர்தலில் சொன்னது போல எந்தவொரு அரசும் செய்யாத சட்ட முன் வடிவைக் கொண்டு வந்துள்ளது. இந்தி பேசக்கூடிய மக்கள் மட்டுமே நீட் தேர்வால் பயன் அடைவார்கள், மாநில பாடங்களைப் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

    பஞ்சமி நிலம் கோரிக்கை

    பஞ்சமி நிலம் கோரிக்கை

    பெரியார் என்பவர் தனி நபர் அல்ல என்று தெரிவித்த திருமாவளவன், பெரியார் என்பது ஒரு கோட்பாடு என்றும் பெரியார் மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடினார் என்றும் பேசினார். மேலும், பெரியார் பிறந்த நாள் தான் தமிழகத்தின் திருநாள் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டில் பஞ்சமி நிலங்களை மீட்கக் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையத்தைச் செயல்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    English summary
    thirumavalavan about NEET exams suicides. VCK party Chief thirumavalavan latest press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X