மதுரை அருகே சுங்கச்சாவடியில் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி.. கட்டணம் இல்லாமல் பறந்த வாகனங்கள்
மதுரை: மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் அமைந்திருக்கிறது திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சுங்கச்சாவடியில் 52 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக வாகனங்கள் கட்டணம் இன்றி சென்றன.
பொதுவாக மதுரையைச் சுற்றியுள்ள புதிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகமாக இருக்கும். இதனால் வாகன ஓட்டிகள் ஒவ்வொரு முறை செல்லும் போதும்,கணிசமான தொகையை செலுத்த வேண்டியதிருக்கும். மிகவும் கூட்டமான நாட்கள், பிரச்சனை ஏற்பட்டால் மட்டும் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க மாட்டார்கள்.

அதேநேரம் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்தம் செய்தால் கட்டணம் வசூலிக்க மாட்டார்கள். அப்படியான சூழல் பொங்கல், தீபாவளி சமயங்களில் அவ்வப்போது நடைபெறும். போனஸ் கேட்டு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போது மட்டும் கட்டணம் இல்லாமல் செல்வார்கள். அப்படி ஒரு சம்பவம் நேற்று நடந்தது. இதைக்கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்பவர்களின் வசதிக்காக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் ராமேஸ்வரம், ராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டத்தின் கணிசமான மக்கள் செல்வார்கள். இந்த வழித்தடத்தில், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு 52 பேர் வேலை செய்து வருகின்றனர்.

சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக மாத சம்பளத்தில் பாதியை கொடுத்துவிட்டு மீதி பொங்கலுக்கு தருவதாக தெரிவித்தார்களாம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஊழியர்கள் மீதி பணத்தை கேட்டபோது நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் நேற்று மாலை 4 மணி முதல் பணியை புறக்கணித்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்தாமல் சென்றன. இதுகுறித்து ஊழியர்கள் கூறும் போது, சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் முறையாக எங்களை அழைத்து பேச வேண்டும். அதுவரை வேலை நிறுத்தம் தொடரும் என்றார்கள். இதற்கிடையே சுங்கச்சாவடி செயல்படாமல் இருந்ததால், வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி அடைந்து, வாகனங்களை ஓட்டிச்சென்றார்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications