சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! 5 ஆண்டுகள் நடந்த விசாரணை நிறைவு.. தீர்ப்பு தேதி அறிவிப்பு
மதுரை: தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போது விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கின்றது மதுரை நீதிமன்றம். கடந்த 2020 ஆம் ஆண்டு தந்தை மகன் போலீஸ் காவலில் கொல்லப்பட்டிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் தனது மகன் பென்னிக்ஸ் உடன் சாத்தான்குளம் பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்தார்.

தந்தை மகன் கொலை வழக்கு
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு நேரத்தில், கடையை திறந்து வைத்து இருந்ததாக போலீஸ் விசாரணைக்கு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். போலீஸ் கஸ்டடியில் தந்தை - மகன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறுக்கு விசாரணை நடந்தது
தந்தை மகன் லாக் அப் டெத் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தந்தை மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்படனர். தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பலமுறை இவர்கள் ஜாமீன் கேட்டும், ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தற்போது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
வரும் 23 ஆம் தேதி தீர்ப்பு
தொடர்ந்து சிபிஐ தரப்பில் கூடுதலாக 400 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் மதுரையை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
பின்னர் அவர் நேரில் ஆஜராகாமல் போனார். இவ்வாறாக தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது விசாரணை அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் வரும் மார்ச் 24 ஆம் தேதி சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கின்றது.
-
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications