Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! 5 ஆண்டுகள் நடந்த விசாரணை நிறைவு.. தீர்ப்பு தேதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போது விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கின்றது மதுரை நீதிமன்றம். கடந்த 2020 ஆம் ஆண்டு தந்தை மகன் போலீஸ் காவலில் கொல்லப்பட்டிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் தனது மகன் பென்னிக்ஸ் உடன் சாத்தான்குளம் பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்தார்.

Verdict on Sathankulam Father Son Case to Be Delivered on March 23

தந்தை மகன் கொலை வழக்கு

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு நேரத்தில், கடையை திறந்து வைத்து இருந்ததாக போலீஸ் விசாரணைக்கு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். போலீஸ் கஸ்டடியில் தந்தை - மகன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குறுக்கு விசாரணை நடந்தது

தந்தை மகன் லாக் அப் டெத் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தந்தை மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்படனர். தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பலமுறை இவர்கள் ஜாமீன் கேட்டும், ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தற்போது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

வரும் 23 ஆம் தேதி தீர்ப்பு

தொடர்ந்து சிபிஐ தரப்பில் கூடுதலாக 400 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் மதுரையை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

பின்னர் அவர் நேரில் ஆஜராகாமல் போனார். இவ்வாறாக தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது விசாரணை அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் வரும் மார்ச் 24 ஆம் தேதி சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கின்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+