விநாயகனே வினை தீர்ப்பவனே.. மதுரை மத்திய சிறை கைதிகள் தயாரிக்கும் அழகான பிள்ளையார் சிலைகள்!
மதுரை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, மதுரை மத்திய சிறையில், கைதிகளால் 500க்கும் மேற்பட்ட விதைப்பந்து விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி, வரும் 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதற்காக விநாயகர் சிலைகள் செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரை சிறையில், ஆயுள் கைதிகளால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான சிறையாக விளங்கும் மதுரை மத்திய சிறைச்சாலையில், தண்டனை கைதிகளை வைத்து இனிப்பு, பலகாரம், நர்சரி கார்டன் உள்ளிட்ட பல்வேறு வகையான விற்பனை, சிறை அங்காடி மூலம் நடைபெற்று வருகிறது. மேலும் இங்குள்ள 1500-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு, மருத்துவ பேண்டேஜ், ஆபீஸ் கவர் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கற்றுத்தரப்படுகின்றன. இதன்மூலம் கைதிகளுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. மதுரை சிறை பஜார் மூலம் கைதிகள் தயாரித்த உணவு பண்டங்கள் விற்கப்படுகின்றன.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைக்கைதிகள் சிறை வளாகத்தில் களிமண்ணால் ஆன சிலைகளை செய்து அதனுள்ளே புன்னை, புங்கை, வேப்பம், நாவல் உள்ளிட்ட மரங்களின் விதைகளை வைத்து 1 அடி மற்றும் ஒன்றரை அடி உயரத்தில் விநாயகர் சிலைகளை தயார் செய்து வருகின்றனர்.
இந்த பணியானது இன்னும் இரு நாட்கள் நடைபெறும் எனவும் இந்த பணிகள் முடிந்தவுடன் சிறை வளாகத்தில் இருக்கக்கூடிய சிறை அங்காடி மூலம், சந்தை மதிப்பை விட குறைந்த விலையில், விநாயகர் சிலைகளை விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி சிறை அலுவலர் பழனி கூறியதாவது: கைதிகளுக்கு பல்வேறு தொழில்கள் புதிதாக கற்றுத்தரப்படுகின்றன. அதில் ஒன்று தான் சிலை தயாரிப்பு. இதுவரை 500க்கும் மேற்பட்ட சிலைகளை தயாரித்துள்ளனர். இதற்கான களிமண் , பெட்ரோல் பங்க்கிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தியாவிலேயே மதுரை சிறையில் மட்டும்தான் முதன்முதலாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. விரைவில் மக்களுக்கு குறைந்த விலையில் விற்க உள்ளோம் என கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications