அன்று அண்ணா சொன்னதை.. இன்று ரஜினி அவர் ஸ்டைலில் சொல்லிருக்காரு.. செல்லூர் ராஜு பாராட்டு
Recommended Video
மதுரை: பேரறிஞர் அண்ணா ஏற்கனவே கூறிய கருத்தை ரஜினி அவரது பாணியில் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்க கூடாது என்று சொல்லியிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்றுள்ளார்.
மதுரை மாநகராட்சி 91வது வார்டு ராமையா தெருவில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்.
அத்துடன் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய அங்கன்வாடி மையத்தினையும் அமைச்சர் செல்லூர் ராஜூ வைத்தார் திறந்து வைத்தார்,

நாட்டின் ஒற்றுமை
பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமையை கருத்தில் கொண்டு தான் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்க கூடாது என்று ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்,

ரஜினி அவர் ஸ்டைலில்
ரஜினிகாந்த் கூறிய கருத்தை 1962 ல் வீடு இருந்தால் தான் கூரை இருக்கும் என அண்ணா கூறியுள்ளார். 1962ல் சீனா படையெடுத்தபோது திராவிட நாடு கொள்கையை ஒத்திவைப்பதாக அண்ணா கூறினார். பேரறிஞர் அண்ணா ஏற்கனவே கூறிய கருத்தை ரஜினி அவரது பாணியில் சொல்லியிருக்கிறார். ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது" என்றார்.

இந்துவில் இருந்து மாறிய கிறிஸ்தவர்கள்
மேலும் அவர் பேசுகையில், "மதுரை அருகே சத்திய முர்த்தி நகரில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக இதுவரை தனது கவனத்திற்கு வரவில்லை, இருப்பினும் இரு தரப்பு மக்கள் ஒற்றுமையுடன் இருக்க சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சனை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தி வரதர் தரிசனம்
அத்திவரதர் குளத்திற்க்குள் வைத்து வழிபடுவதா, கோவிலில் வைத்து வழிபடுவதா என்பது குறித்து இந்து சமய பெரியோர்களின் வகுத்துள்ள சம்ரதாயம், சாஸ்திரபடி முடிவு செய்யப்படுகிறது. அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்பது இந்து மக்களின் ஆதங்கமாக இருந்தாலும் சம்ரதாய, சாஸ்திரப்படிதான் முடிவு செய்யப்படுகிறது. அதனை அரசு நிறைவேற்றுகிறது. மாணவர்கள் கயிறு கட்டுவது தொடர்பான விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications