யாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..!
லலிதா ஜுவல்லரி கொள்ளையன் கணேசன் முருகனின் நண்பன்
Recommended Video
மதுரை: யாருய்யா இந்த "பள்ளப்பட்டி கணேசன்".. என்பதுதான் கணேசனை பத்தின கேள்வியாக இருக்கிறது. இவர் எல்லாம் பெரிய பிரபலம் இல்லை.. கொள்ளைக்காரன்தான்!
லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மெயின் குற்றவாளி முருகன்தான். இதில் அடுத்ததாக முருகனின் தம்பி சுரேஷ் பெயர் அடிப்பட்டு வந்தது.

ஆனால், நாளடைவில் சுரேஷைவிட மிஞ்சியது கணேசன் என்பவனது பெயர்தான். ஏற்கனவே மணிகண்டன், சுரேஷ், கனகவள்ளி உட்பட சிறையில் உள்ளனர்.. இவர்களை தவிர பலர் விசாரணை வளையத்துக்குள்ளும் உள்ளனர்.
எனினும் கணேசன் பெயரை உச்சரித்தது முருகன்தான்.. அப்போதுதான் கணேசன் என்ற ஒருத்தனை பற்றியே போலீசாருக்கு தெரியவந்தது. முருகனின் வாக்குமூலத்தில், "நானும் கணேசனும்தான் சுவற்றில் ஓட்டை போட்டோம். உள்ளே குதித்தோம்.. நகைகளை அள்ளினோம்.. வெளியில் 2 பேரை காவலுக்கு நிற்க வைத்தோம். எனக்கு 12 கிலோ நகை, கணேசனுக்கு 6 கிலோ, மிச்சம் 2 பேருக்கு 5 கிலோ நகைகளை, ஆத்தங்கரையில் வைத்து பிரித்து கொண்டோம்" என்று வாக்குமூலம் தந்தான்.
அப்போதுதான் கணேசனை பற்றிய தகவல்களை போலீசார் சேகரிக்க ஆரம்பித்துள்ளனர். கணேசன் பள்ளப்பட்டியை சேர்ந்தவனாம். ஜெயில் மேட்.. அதாவது கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கணேசனை கடந்த சில வருடங்களுக்கு முன்பு கைது செய்த போலீஸார் சேலம் ஜெயிலில் அடைத்துள்ளனர். அங்குதான் முருகன் கணேசனுக்கு அறிமுகமானான்.
ஜெயிலுக்குள்ளேயே ஒருத்தருக்கொருத்தர் நண்பர்களாகிவிட்டனர். கைதி என்றாலும் கணேசனை சாதாரணமாக நினைத்துவிட முடியாது. முருகனுக்கே சில கேஸ்களில் கணேசன்தான் ஜாமீன் வாங்கி தந்திருக்கிறாராம். அந்த அளவுக்கு "திக் ஃப்ரண்ட்ஸ்"!
இதற்கு பிறகுதான் கணேசனை முருகன் அளவுக்கு அதிகமாக நம்ப தொடங்கி உள்ளான். இப்போது மதுரையில் கைது செய்யப்பட்ட கணேசன் போலீஸ் கஸ்டடியில் உள்ளதால், முருகன் தொடர்பான பல செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications