டாஸ்மாக் உள்ள பகுதியில் மக்கள் எதிர்ப்பை மீறி மனமகிழ் மன்றம் என்று புதிய மதுக்கடை ஏன்.. ஐகோர்ட்
மதுரை: அறந்தாங்கியில், பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தற்போது மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்படும் பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதையும் மீறி மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக மதுக்கடை திறப்பது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த சபீக் யாசிர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு நடந்து வருவதற்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஏற்கனவே டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது.

ஆனால் தற்போது அறந்தாங்கியில், பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மாணவ, மாணவிகள், பெண்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.
இதனை கருத்தில் கொண்டு புதிய மதுபான கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது என பொதுமக்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கடை திறக்கப்பட இருக்கிறது. இதற்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு மனுவில் சபீக் யாசிர் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் எதிர்ப்பையும் மீறி அங்கு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கடை திறப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்கள். விசாரணை முடிவில், மனுதாரர் பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்படுகிறதா? என்பது பற்றி வக்கீல் கமிஷனர் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications