Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக் உள்ள பகுதியில் மக்கள் எதிர்ப்பை மீறி மனமகிழ் மன்றம் என்று புதிய மதுக்கடை ஏன்.. ஐகோர்ட்  

Subscribe to Oneindia Tamil

மதுரை: அறந்தாங்கியில், பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தற்போது மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்படும் பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதையும் மீறி மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக மதுக்கடை திறப்பது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த சபீக் யாசிர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு நடந்து வருவதற்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஏற்கனவே டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது.

Why is a new liquor store being built in an area where TASMAC is located despite public opposition

ஆனால் தற்போது அறந்தாங்கியில், பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மாணவ, மாணவிகள், பெண்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

இதனை கருத்தில் கொண்டு புதிய மதுபான கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது என பொதுமக்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கடை திறக்கப்பட இருக்கிறது. இதற்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு மனுவில் சபீக் யாசிர் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் எதிர்ப்பையும் மீறி அங்கு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கடை திறப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்கள். விசாரணை முடிவில், மனுதாரர் பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்படுகிறதா? என்பது பற்றி வக்கீல் கமிஷனர் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+