Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரம்மாண்டமாக உருவாகும் கலைஞர் நூலகம்.. 3 மாதங்களில் பணிகள் நிறைவு.. அமைச்சர் எ.வ.வேலு திடீர் விசிட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அடுத்த 3 மாதங்களுக்குள் கலைஞர் நூலக கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, விரைவாக திறந்து வைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பிரம்மாண்டமாக உருவாகும் கலைஞர் நூலகம்.. 3 மாதங்களில் பணிகள் நிறைவு.. அமைச்சர் எ.வ.வேலு திடீர் விசிட்

    மதுரையில் ரூ.114 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணியினை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Within the next 3 months, the construction work of the Karunanithi library will be completed says Minister EV Velu in Madurai

    இதனைத்தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், தமிழகத்தில் வாகன போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாய நிலை வந்துள்ளது. சாலை விரிவாக்கத்திற்காக எத்தனை ஆண்டுகள் பழமைவாய்ந்த மரங்களாக இருந்தாலும் அகற்றபட வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வாறு அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக ஒரு மரத்திற்கு 10 மரங்கள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    அதுமட்டுமல்லாமல் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மரக் கன்றுகளை வைக்க அமைச்சர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் மரங்களை வைக்க ஆந்திராவில் இருந்து மரக்கன்றுகள் வரவழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

    தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் விதிகளை மீறி அதிக அளவில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்பது விதி. ஆனால் 60 கிலோ மிட்டருக்கு உட்பட்ட பகுதியில் கூடுதலாக அமைக்கபட்டுள்ள சுங்கச்சாவடிகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னையில் நான்கு சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் விதிகளுக்கு புறம்பாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    அதேபோல் கலைஞர் நினைவு நூலாக கட்டுமான பணி 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது உள் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் இந்த பணிகள் நிறைவடையும். ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு நூலகத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+