தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்- கோட்டாட்சியர்
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை மயிலாடுதுறை கோட்டாட்சியர் நீக்கினார். இதனால் வரும் மே 22 ஆம் தேதி பட்டினபிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
Recommended Video
தருமபுரம் ஆதீனத்தில் பல 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பட்டினபிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது இந்த வழக்கத்தை குரு பூஜை என சொல்லப்படுகிறது.
குருபூஜையின் போது குருவை பல்லக்கில் அமர வைத்து சிஷ்யர்கள் தூக்கி செல்வார்கள். மனிதனை மனிதனே தூக்கி செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்துள்ளது.

இந்து அமைப்புகள்
இந்த தடையை நீக்க கோரி இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. அதிமுக, பாஜக, உள்ளிட்ட கட்சிகளும் திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த பிரச்சினை சட்டசபையிலும் எதிரொலித்தது. என் உயிரே போனாலும் இந்த பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தியே தீருவேன் என மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தார்.

முதல்வருடன் ஆதீனங்கள் சந்திப்பு
இந்த நிலையில் பல்வேறு ஆதீனங்கள் நேற்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆதீனங்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சி இந்த ஆண்டு சுமூகமாக நடைபெற வேண்டுகோள் விடுத்தோம்.

ஆன்மீக உள்ளங்கள்
ஆதீனமும், ஆன்மீக உள்ளங்களும் எந்தவித கவலையும் கொள்ளாமல் இருக்கும் வகையில் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் என்றார். இந்த நிலையில் இன்று காலை மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடந்த குடமுழுக்கு நிகழ்ச்சியில் தருமபுரம், திருவாவடுதுறை, செங்கோல் மற்றும் தொண்டை மண்டல ஆதீனங்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

கோட்டாட்சியர் தடை நீக்கம்
அப்போது பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடத்திக் கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுரம் ஆதீனம் பேட்டி அளித்திருந்தார். இதனால் பட்டினப்பிரவேசம் மீதான தடை நீக்கப்படும் என தெரிய வந்தது. அதன்படி வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி மீதான தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனால் ஆதீனங்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் எதிர்ப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழி ஆர்வம்.. எந்த தொகுதி? ஸ்டாலின் கையில் முடிவு -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
ஆரம்பிக்கலாங்களா.. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் -
சட்டம் ஒழுங்கு பிரச்சனை அஸ்திரத்தை கையிலெடுத்த அதிமுக கூட்டணி .. மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக்












Click it and Unblock the Notifications