நாக்பூரில் 2 சிறுவர்களுக்கு HMPV பாதிப்பு.. இந்தியாவின் மொத்த பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு..
மும்பை: சீனாவில் வேகமாக பரவி வரும் எச்எம்பிவி பாதிப்பு நம் நாட்டிலும் நுழைந்துள்ளது. நேற்றைய தினம் கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத்தில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 2 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டில் எச்எம்பிவி-யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 7 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் தற்போது எச்எம்பிவி எனும் ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ் பாதிப்பால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவுக்கான அறிகுறியுடன் இந்த பாதிப்பு என்பது ஏற்பட்டு வருகிறது. இதனால் சீனாவில் பல மருத்துவமனையில் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்நிலையில் தான் இந்த எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு என்பது நம் நாட்டிலும் பரவ தொடங்கி உள்ளது. நேற்றைய தினம் கர்நாடகாவில் 2 பேர், குஜராத்தில் ஒருவர், தமிழ்நாட்டில் 2 பேர் என்று மொத்தம் 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 மற்றும் 12 வயது குழந்தைகளுக்கு எச்எம்பிவி பாதிப்பு என்பது உறுதியாகி உள்ளது. அதாவது கடந்த 3ம் தேதி 2 சிறுவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காய்ச்சல் மற்றும் சளியால் அவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். இருவருக்கும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் நோய் குணமாகவில்லை. இந்நிலையில் தான் தற்போது அவர்களுக்கு எச்எம்பிவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.
நாக்பூரில் 2 சிறுவர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் எச்எம்பிவி-யால் தாக்கியவர்களின் எண்ணிக்கை என்பது 7 ஆக அதிகரித்துள்ளது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி கர்நாடகாவில் 2 மாத குழந்தை, 8 மாத குழந்தை என்று 2 பேரும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 மாத குழந்தை, தமிழ்நாட்டில் சென்னையில் 2 குழந்தைகள் என்று மொத்தம் 5 பேர் பாதிக்கப்பட்டனர். அந்த வரிசையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று 7 மற்றும் 12 வயது குழந்தைகளுக்கு எச்எம்பிவி பாதிப்பு என்பது உறுதியாகி உள்ளது. இப்படியாக மொத்தம் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு மகாராஷ்டிரா மாநிலம் என்பது குஜராத், கர்நாடகாவுடன் எல்லைகளை பகிர்ந்து வருகிறது. ஏற்கனவே குஜராத் மற்றும் கர்நாடகாவில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை உஷாராகி உள்ளது. மாநிலத்தில் மேற்கொண்டு எச்எம்பிவி பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைளை தொடங்கி உள்ளது.
இந்த எச்எம்பிவி வைரஸ் என்பது புதிய வைரஸ் இல்லை. இது கடந்த 2001ம் ஆண்டிலேயே நெதர்லாந்தில் பரவ தொடங்கியது. இது கொரோனா அளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இது ஒரு சீசன் வைரஸ். அதாவது குளிர் மற்றும் பனிக்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும் தன்மை கொண்டது. தற்போது இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உள்பட பலர் தெரிவித்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications