மும்பை ஜெய்ப்பூர்- மும்பை விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் துப்பாக்கிச் சூடு! 4 பேர் பலி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே ஜெய்ப்பூர்- மும்பை விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு ரயில்வே பாதுகாப்பு படை காவலர் உள்பட 4 பேர் பலியாகிவிட்டனர்.
ஜெய்ப்பூரிலிருந்து மும்பை நோக்கி 12956 என்ற எண் கொண்ட விரைவு ரயில் இன்று காலை 5.23 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது மும்பை அருகே போரிவலி பால்கார் ரயில் நிலையத்தை தாண்டிய போது அந்த ரயிலில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து சுட்டார்.

இதில் உடனிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர், 3 பயணிகள் என 4 பேர் பலியாகிவிட்டனர். இதையடுத்து அந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் தாஹிசார் ரயில் நிலையத்தில் தப்பியோடினார்.
தகவலறிந்த போலீஸார் அவரை விரட்டி சென்று பிடித்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டை ஏன் நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விடுமுறை அளிக்காதது, உயரதிகாரிகளின் அழுத்தம் உள்ளிட்டவற்றால் மன உளைச்சல் ஏற்பட்டு துப்பாக்கியால் சுட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications