பாழடைந்த மருத்துவமனை கட்டிடம்.. மும்பை போலீசுக்கு வந்த போன்! உள்ளே 4 பிணங்கள் -யார் எந்த மர்ம ஆண்?
மும்பை: பாழடைந்த மருத்துவமனை கட்டிடத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த 4 பேரின் சடலங்களை மீட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள கண்டிவாலி பகுதியில் 15 ஆண்டுகளாக செயல்படாத நிலையில் பழைய மருத்துவமனை கட்டிடம் அமைந்துள்ளது.
அந்த கட்டிடத்தில் கிரண் தேவி என்ற பெண், முஸ்கன் மற்றும் பூமி ஆகிய தனது 2 மகள்களுடன் வசித்து வந்திருக்கிறார்.

மும்பை போலீசுக்கு வந்த போன்
இந்த நிலையில், மும்பை போலீசுக்கு நேற்றிரவு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் மருத்துவமனை கட்டிடத்தில் வசித்து வந்த பெண் குடும்பத்தோடு இறந்துகிடப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே பழைய மருத்துவமனை கட்டிடத்துக்கு சென்று செல்போனில் கிடைத்த தகவல் உண்மைதானா என்று அறிய முற்பட்டனர்.

4 பேர் பலி
அப்போது, கிரண் தேவியும் அவரது மகள் முஸ்கனும் அறைக்குள் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மற்றொரு மகள் பூமி எங்கே என்று தேடியபோது அவர், வேறொரு அறை ஒன்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கிக்கொண்டு இருந்தார். அவருக்கு அருகே ஒரு ஆணின் சடலமும் தொங்கிக் கொண்டிருந்தது.

யார் அந்த ஆண்?
4 பேரது உடல்களையும் மீட்ட மும்பை போலீஸ் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மற்றொரு ஆண் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் ஷிவ்தயால் சென் என்றும், ஓட்டுநராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. பாழடைந்த அந்த மருத்துவமனையில் சில கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
தூக்கில் தொங்கிய ஓட்டுநர் ஷிவ்தயால் சென், தாய் கிரண் தேவியையும் அவரது 2 மகள்களையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று மும்பை போலீசார் கணித்துள்ளனர். இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவுகள், தடயவியல் அறிக்கை கிடைக்கப்பெற்று முழு விசாரணை செய்த பிறகே உண்மை குற்றவாளி யார் என்பது தெரியவரும் என அவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications