மகாராஷ்டிராவில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா ஒரேநாளில் 59ஆயிரம் பேர் பாதிப்பு - 301 பேர் மரணம்
மகராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 58993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3288540 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 58993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3288540 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 534603 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அம்மாநிலத்தில் ஒரே நாளில் 58993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3288540 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 45 391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2695148 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 534603 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பலனின்றி அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 301 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 57329 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications