பெண் ஓனர் செய்த தவறுக்கு மாட்டின் வயிற்றில் 65 தையல்கள்.. கொடூரம்!
மும்பை: மகாராஷ்டிராவில் பெண் ஓனர் செய்த தவறுக்கு மாட்டின் வயிற்றில் 65 தையல்கள் போடப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்ஹரி. இவருடைய மனைவி கடந்த 1 ஆம் தேதி குளிப்பதற்காக சென்றார். அப்போது தனது 20 கிராம் மதிப்பிலான தங்கச் தாலிச் செயினை கழற்றி சோயாபீன் மற்றும் கடலைப்பருப்பு நிரப்பப்பட்ட தட்டில் மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் குளித்துவிட்டு அவர் தாலி செயினை மறந்துவிட்டு மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். மேலும் அவர் வீட்டில் எருமை மாடு வளர்த்து வருவதால் அதற்கு உணவு கொடுக்கச் சென்றார்.
அப்போது சோயா பீன், கடலைப்பருப்பு தட்டை எடுத்து எருமைக்கு உணவாக கொடுத்தார். பின்னர் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போதுதான் தங்க தாலி சங்கிலி கழுத்தில் இல்லாததை எண்ணி அதிர்ச்சி அடைந்தார். உடனே வீடு முழுக்க தேடினார். கிடைக்கவில்லை. அப்போதுதான் அந்த சோயாபீன்- கடலைப்பருப்பு தட்டில் வைத்தது நினைவுக்கு வந்தது.
#WATCH महाराष्ट्र:वाशिम ज़िले के एक गांव में भैंस के द्वारा सोने का मंगलसूत्र खाने की घटना सामने आई है। ऑपरेशन से 25 ग्राम का मंगलसूत्र निकाला गया।
— ANI_HindiNews (@AHindinews) October 1, 2023
पशु चिकित्सा अधिकारी बालासाहेब कौंदाने ने बताया, " मेटल डिटेक्टर से पता चला कि भैंस के पेट में कोई धातु है। 2 घंटे ऑपरेशन चला,… pic.twitter.com/AlM8cpamMc
ஓடி போய் பார்த்தார். அங்கு தட்டு இல்லை. அடடா, எருமை மாடுக்கு சாப்பிட தட்டை வைத்தோமே என பதறி அடித்துக் கொண்டு மாட்டு கொட்டகைக்கு சென்றார். அங்கு பார்த்த அவருக்கு அதிர்ச்சி, எருமை மாடு அன்றைக்கு என பார்த்து தட்டு முழுக்க இருந்த உணவை சாப்பிட்டுவிட்டது. இதனால் மேலும் பதறிய அந்த பெண் உடனடியாக கால்நடை மருத்துவரை அழைத்துள்ளார்.
அவர் வந்து மாட்டின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது அதன் வயிற்று பகுதியில் தங்க சங்கிலி இருந்தது தெரியவந்தது. உடனே அந்த மாட்டின் வயிற்றை அறுவை சிகிச்சை செய்து அந்த 20 கிராம் தங்க சங்கிலியை எடுத்துள்ளார். இதனால் மாட்டிற்கு 60 முதல் 65 தையல்கள் போடப்பட்டன. இது பெரும் கொடூர சம்பவம் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். தங்க சங்கிலியின் மதிப்பு ரூ 1.5 லட்சமாகும்.
தாலி செயினை கழற்றி பொறுப்பில்லாமல் மாட்டு தீவனத்தில் வைத்ததுடன் அதன் வயிற்றை கிழித்து சங்கிலியை எடுத்துள்ளார். அந்த மாட்டின் வயிற்றில் போடப்பட்ட 65 தையல்கள் எத்தனை வலியை கொடுக்கும். வாயில்லா ஜீவனை இப்படியா வதைப்பது என நெட்டிசன்கள் கண்டிக்கிறார்கள். அதேவேளையில் அந்த தங்க சங்கிலி உள்ளேயே இருந்தாலும் மாட்டுக்கு ஆபத்துதான். அதனால் அதை வெளியே எடுத்ததுதான் நல்லது என இரு வேறு விதமான கருத்துகள் உலா வருகின்றன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications