மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா- தாராவியில் மேலும் 25 பேருக்கு பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் மும்பை தாராவியில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு உச்சகட்டமாக உள்ளது. மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இன்று மாலை 6 மணி வரை மொத்தம் 778 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் 14 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6427 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 283 ஆகவும் உயர்ந்துள்ளது.
மும்பையில் மட்டும் மொத்தம் 4980 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. மும்பையில் மட்டும் உயிரிழப்பு எண்ணிக்கை 197 ஆகும். மும்பையில் தமிழர்கள் வாழும் தாராவியிலும் கொரோனாவின் தொற்று அதிகமாக உள்ளது.

மும்பை தாராவியில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. மேலும் ஒருவர் கொரோனாவால் மரணமடைந்தும் உள்ளார்.
தாராவியில் கொரோனாவால் மொத்தம் 13 பேர் பலியாகி இருக்கின்றனர். தாராவியி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 214 ஆகவும் அதிகரித்துள்ளது.
-
அனைத்து ஊழியர்களுக்கும் ஐபோன் 17 Pro Max-ஐ கிப்ட் கொடுத்த சீன நிறுவனம்! இந்தியாவின் நிலைமையை பாருங்க -
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
அடுத்த தலைமுறைக்கான 'டிஜிட்டல் தங்கம்'.. உலகையே கண்ட்ரோலில் எடுக்கும் சீனா.. அப்போ இந்தியா எங்கே? -
இந்தியாவில் முதல்முறை! சிறந்த பணியிட மகிழ்ச்சி விருதுகள் அறிமுகம்! ஹர்ஷ் கோயங்கா தலைமையில் மெகா டீம் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications