மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா- தாராவியில் மேலும் 25 பேருக்கு பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் மும்பை தாராவியில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு உச்சகட்டமாக உள்ளது. மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இன்று மாலை 6 மணி வரை மொத்தம் 778 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் 14 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6427 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 283 ஆகவும் உயர்ந்துள்ளது.
மும்பையில் மட்டும் மொத்தம் 4980 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. மும்பையில் மட்டும் உயிரிழப்பு எண்ணிக்கை 197 ஆகும். மும்பையில் தமிழர்கள் வாழும் தாராவியிலும் கொரோனாவின் தொற்று அதிகமாக உள்ளது.

மும்பை தாராவியில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. மேலும் ஒருவர் கொரோனாவால் மரணமடைந்தும் உள்ளார்.
தாராவியில் கொரோனாவால் மொத்தம் 13 பேர் பலியாகி இருக்கின்றனர். தாராவியி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 214 ஆகவும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications