அனுமதி காலம் முடிந்தும்.. அரசு இல்லத்தில் தங்கியிருந்த..35 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ரூ.4 கோடி அபராதம்
மும்பை: அனுமதி காலம் முடிந்தும் நீண்ட நாட்கள் அரசு இல்லத்தில் தங்கி இருந்த 35 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ரூ.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிக உயர்ந்த பதவிகளை அலங்கரிப்பவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆவார்கள். இவர்கள் இந்தியாவில் எந்த மூலையில் பணிபுரியுந்தாலும் அவர்கள் தங்குவதற்கு அரசு இல்லம் ஒதுக்கி கொடுக்கப்படும்.

ரூ.3.82 கோடி அபராதம்
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஓய்வு பெரும்போதோ அல்லது வேறு இடங்களுக்கு பணிமாறுதல் பெற்று செல்லும்போதோ அரசு ஒதுக்கிய இல்லத்தை காலி செய்து விட வேண்டும். அதன்பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அரசு இல்லத்தை காலி செய்யாவிடில் அபராதம் விதிக்கப்படும். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் அனுமதி காலம் முடிந்தும் நீண்ட நாட்கள் அரசு இல்லத்தில் தங்கி இருந்த 35 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ரூ.3.82 கோடி அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்.டி.ஐ தகவல்
இந்த அதிகாரிகளின் பட்டியலில் மும்பை போலீஸ் முன்னாள் கமிஷனர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் ஒருவர் இரண்டு முறை பா.ஜ.க எம்.பி. ஆவார். இந்த பட்டியலில் நான்கு காவல் ஆணையர்கள் உள்ளனர், மேலும் இரண்டு ஏடிஜிபி, மற்றும் முன்னாள் டிஜிபி ஒருவரும் இந்த பட்டியலில் உள்ளார். தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த அதிகாரிகள் செலுத்த வேண்டிய அபராதங்கள் மார்ச் 2021 இறுதி வரை கணக்கிடப்பட்டுள்ளன.

9 ஆண்டுகள் கூடுதலாக தங்கியுள்ளார்
இந்த 35 அதிகாரிகள் பட்டியலில் ஏழு பேர் மட்டும் தலா ரூ .20 லட்சத்துக்கு மேல் அபராதம் செலுத்த வேண்டியதுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டம் கூறுகிறது. புனேவில் உள்ள மாநில ரிசர்வ் போலீஸ் படையின் டி.ஐ.ஜி சஞ்சய் குமார் பவிஸ்கர் மட்டும் அதிக அளவாக ரூ.77.75 லட்சம் அபராத தொகை செலுத்த வேண்டும். 2011 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இவர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் 2020 அக்டோபர் வரை மும்பையில் அரசு இல்லத்தில் தங்கி இருந்துள்ளார்.

3 மாதம் விலக்கு
இவர்களில் பலர் நங்கள் அரசு அனுமதி பெற்றே இல்லங்களில் தங்கி இருந்தோம் என்று கூறியுள்ளனர். அபராத தொகை விதிக்கப்பட்டது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ' முதல் மூன்று மாதங்களுக்கு, அரசு எதையும் வசூலிக்கவில்லை, ஏனெனில் இது அவர்களின் குடும்பங்களை மாற்று இடத்துவதற்கு நகர்த்துவதற்கான நேரம். அடுத்த மூன்று மாதங்களுக்கு, அரசாங்கம் உரிம கட்டணம் மட்டுமே வசூலிக்கிறது.

அதிகாரி சொல்வதென்ன?
ஆயினும் ஒரு அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகும் தங்குமிடத்தை காலி செய்யத் தவறினால், உரிமக் கட்டணத்திற்கு கூடுதலாக அபராதம் விதிக்க அரசு உத்தரவிடுகிறது. தங்குமிடத்தின் அளவைப் பொறுத்து உரிம கட்டணம் மாதத்திற்கு ரூ .120 முதல் ரூ.1,400 வரை மாறுபடும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications