மோடியின் “புனித பசு” அதானி.. அதை கட்டிப்பிடித்து “கவ் ஹக் டே” கொண்டாடுவார்! உத்தவ் சிவசேனா விமர்சனம்
அதானி நிறுவன பங்கு மோசடி தொடர்பாக பேசாத பிரதமர் நரேந்திர மோடியின் புனித பசு அதானி என்று மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சாம்னா பத்திரிகை விமர்சித்து உள்ளது.
மும்பை: தொழிலதிபர் அதானி ஷெல் நிறுவனங்கள் மூலம் தனது நிறுவன பங்குகளை உயர்த்தி மோசடியில் ஈடுபட்டதாக ஹிட்டன்பெர்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால் அதன் பங்குகள் கடும் சரிவை சந்தித்து இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் புனித பசு அதானி என்று மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனாவின் சாம்னா பத்திரிகை விமர்சித்து உள்ளது.
பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், மத்திய அரசின் இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அதாவது காதலர் தினம் கொண்டாடப்படும் அதே பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று இந்தியாவில் Cow Hug Day எனப்படும் பசு தழுவுதல் தினத்தை கொண்டாட அழைப்பு விடுத்தது.

பசு தழுவல் தினம்
இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் விலங்குகள் நல வாரியத்தின் இந்த அறிவிப்பை விமர்சித்தும், கேலி செய்தும் மீம்கள் வெளியாகின. காதலர் தினத்தை மறைமுகமாக எதிர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக பலர் விமர்சித்தனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பை கைவிடுவதாக நேற்று விலங்குகள் நலவாரியம் தெரிவித்தது.

உத்தவ் சிவசேனா விமர்சனம்
இந்த நிலையில், அதானி நிறுவன சர்ச்சை மற்றும் விலங்குகள் நல வாரியத்தின் முடிவை ஒப்பிட்டு சிவசேனா (உத்தவ் தாக்கரே) தரப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசை விமர்சித்து எழுதப்பட்டு இருக்கிறது.

அதானி பற்றி பேசாத மோடி
அதில் குறிப்பிட்டு இருப்பதாவது, "எதிர்க்கட்சிகள் அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிரதமர் ஒரு வரி கூட அதானி பற்றி பேசவே இல்லை. ஆனால் மக்களை மீண்டும் அமைதியாக்க மோடி அரசு மதத்தை எடுத்து இருக்கிறது. அதானி பற்றி நாடாளுமன்றத்தில் பேசாத மோடி அரசு பசு மாடு குறித்து பேசுகிறது.

மோடியின் புனித பசு
பங்கு சந்தையின் பெரிய எருது அதானி. ஆனால், அவர் பிரதமர் மோடியின் புனிதமான பசு. அதை பிரதமர் தழுவி இருக்கிறார். அவர் அதன் பிடியை தளர்த்த தயாராக இல்லை. இந்த ஆண்டு பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களவை தேர்தலுக்கும் இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கிறது.

பாஜக ஆட்சி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் நாட்டில் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாகவே ராமர் கோயில், பசு மாடுகளை வைத்து அவர்கள் பொதுமக்களிடம் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கின்றனர்." என்று குறிப்பிட்டு உள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications