ஐஸ்வர்யா ராய் காரில் மோதிய பஸ்.. மும்பை சாலையில் பரபரப்பு! என்ன ஆச்சு? ஷாக் ஆன ரசிகர்கள்!
மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது இன்று பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மும்பையில் இன்று ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் ஒரு பேருந்தில் மோதியுள்ளது. அவரது மெய்க்காப்பாளர்கள் நிலைமையை கண்டு காரை விட்டு வெளியே வந்தனர். இந்தச் சம்பவத்தால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, காருக்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு சிறிய விவாதத்திற்குப் பிறகு, அங்கிருந்து கார் புறப்பட்டது.

'5050' என்ற பதிவு எண்ணைக் கொண்டது ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார். அதன் மூலம் இன்று பேருந்துடன் மோதியது ஐஸ்வர்யா ராயின் கார் என்பது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள், ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என கவலையுடன் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தின் போது நடிகை ஐஸ்வர்யா ராய், காரின் உள்ளேயோ அல்லது வெளியேயோ தென்படவில்லை. எனவே விபத்தில் சிக்கியபோது அவர் காரில் இருந்தாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இப்படி ஒரு விபத்து நடக்கவில்லை என்றும் சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜூஹுவைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி, பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்துக் கொண்டிருந்ததால், கார் ஓட்டுநர் வாகனத்திலிருந்து இறங்கி, ஏன் ஹாரன் அடிக்கிறார் என்று கேட்டார். எந்த விபத்தும் நடக்கவில்லை எனத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, அசுதோஷ் கோவரிகரின் மகன் கோனார்க் கோவரிகரின் திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சனும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக கலந்து கொண்டனர். இந்த பிரமாண்டமான கொண்டாட்டத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications