துணை முதல்வர் பதவியிலிருந்து விலகியது ஏன்? அஜித் பவார் கூறும் பரபரப்பு காரணங்கள் இவை!
Recommended Video
மும்பை: துணை முதல்வர் பதவியிலிருந்து தான் விலகியதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்புதான் காரணம் என அஜித்பவார் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக கடந்த சனிக்கிழமை பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது. இதற்கு உதவியவர் என்சிபி எம்எல்ஏவும் சரத்பவாரின் உறவினருமான அஜித் பவார். இவரும் துணை முதல்வராக பதவியேற்றார்.
இந்த புதிய அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சிவசேனா. இதில் இன்றைய தினம் பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் அதற்குள் எல்லாம் தலைகீழானது.

சட்டசபை
அஜித்பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தேவேந்திர பட்னவீஸும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு செல்லாமலேயே கவிழ்ந்தது. இந்த நிலையில் இன்று மகாராஷ்டிரா சட்டசபையின் முதல் கூட்டம் நடைபெற்றது.

என்சிபி
இந்த கூட்டத்திற்கு வந்த அஜித்பவாரை தங்கை சுப்ரியா சுலே வரவேற்றார். இந்த நிலையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்ட அஜித் பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் ஏற்கெனவே சொன்னது போல் என்சிபியில்தான் இருந்தேன். என்சிபியில்தான் இருப்பேன்.

என்சிபி
அவர்கள் என்னை நீக்கினார்களா? என்சிபியிலிருந்து என்னை நீக்கியதாக கேள்விப்பட்டீர்களா இல்லை எங்காவது செய்தியை படித்தீர்களா. நான் இன்னும் என்சிபியில்தான் இருக்கிறேன்.

எனது முடிவை மாற்றிக் கொண்டேன்
கட்சியில் என்னுடைய பணி குறித்து கட்சித் தலைமையே முடிவு செய்யும். சுப்ரீம் கோர்ட் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டதை அடுத்து நான் எனது முடிவை மாற்றி கொண்டேன். அது போல் என்னுடைய சக கட்சியினரிடமும் பேசினேன் என்றார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications