அடடே இப்படி ஒரு இடமா! இதுவரை கேள்விப்படவே இல்லையே.. ஆனந்த் மகிந்திராவையே மெய்சிலிர்க்க வைத்த ஸ்பாட்
மும்பை: ஆனந்த் மகிந்திரா தனது தொழிற்சாலைக்கு அருகிலேயே இருந்த மலைச்சிகரம் ஒன்றை பற்றி முதல் முறையாக கேள்வி பட்டதாக கூறியிருப்பதோடு.. கண்டிப்பாக இத்தகைய இடங்களுக்கு நாம் செல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா. வாகன உற்பத்தி முதல் டெக் கம்பெனிகள் வரை இந்தியாவில் தொழில் சாம்ராஜ்ஜியங்களை நடத்தி வரும் மகிந்திரா & மகேந்திரா குழுமத்தின் தலைவராக ஆனந்த மகிந்திரா இருக்கிறார். உலக அளவில் முன்னணியில் வகிக்கும் நிறுவனங்களின் தலைவராக இருந்தாலும் ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இயங்கக் கூடியவர்.

குறிப்பாக எக்ஸ் தளத்தில் தனக்கு பிடித்த துணுக்குகள், தன்னம்பிக்கை கதைகள், எளிய பின்னணியில் இருந்து சாதித்த நபர்கள் குறித்த விவரங்கள் என தான் கண்டு, கேட்டு வியந்த விஷயங்கள் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். ஆனந்த் மகிந்திராவின் ட்விட்கள் பலவும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரல் ஹிட் அடிக்கும்.
ஆனந்த் மகிந்திராவை எக்ஸ் தளத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள கல்சுபை சிகரத்தின் வீடியோவை பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா.. அதன் அழகை பார்த்து மெய்மறந்து ரசித்ததோடு, அது தொடர்பாக ஒரு ட்வீட் பதிவும் பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திரா கூறியிருப்பதாவது:-
இது கல்சுபை மலைச்சிகரம்.. மகாராஷ்டிரா மாநிலத்தில் இகாத்புரி அருகே எங்களின் என்ஜின் தொழிற்சாலை அருகே அமைந்துள்ளது. இகாத்புரிக்கு நான் பலமுறை வந்துள்ளேன். ஆனால், இந்த இடம் பற்றியோ அதன் ரம்மியான அழகை பற்றியோ ஒருபோதும் கேள்வி பட்டது இல்லை. கண்டிப்பாக இதை ரசிப்பதற்காக நம் வாழ்வில் நேரம் ஒதுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், நூற்றுக்கணக்கான கமெண்டுகளையும் சில மணி நேரங்களிலேயெ பெற்றுவிட்டது. ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஒருவர் கூறுகையில், இந்த இடம் அருமையாக உள்ளது. நமக்கு அருகாமையிலேயே இப்படி பல இடங்கள் இருக்கின்றன.
இந்த இடம் மகாராஷ்டிராவில் தான் இருக்கிறதா என்று என்னால் நம்பவே முடியவில்லேயே" என்று பதிவிட்டுள்ளார். கோடை விடுமுறைக்கு செல்ல இதுவே சரியான இடமாக இருக்கும் என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். அதேபோல நெட்டிசன்கள் பலரும் கல்சுபையின் இயற்கை அழகை ரசித்து அங்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
மகாராஷ்டிராவில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களில் ஒன்றாக கல்சுபை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த இடம் மகாராஷ்டிராவில் உள்ள மிக உயரமான சிகரமாக உள்ளது. அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள அகோல் தாலுகாவில் இந்த இடம் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5,400 அடி உயரத்தில் அமைந்து இருக்கும் இந்த இடம் மகாராஷ்டிராவின் எவரெஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications