ஆகஸ்ட் 10-ல் ஏக்நாத் ஷிண்டே பதவி அம்போ- அஜித்பவார் புது சிஎம்: கொளுத்தி போட்ட காங்கிரஸ் சவான்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 10-ந் தேதி தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகும்; புதிய முதல்வராக தேசியவாத காங்கிரஸின் அதிருப்தி கோஷ்டி தலைவர் அஜித் பவார் பதவியேற்பார் என முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான் கூறிய கருத்து பெரும் விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அண்மையில் புதிய திருப்பமாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) இரண்டாக பிளவுபடுத்தப்பட்டது. தேசியவாத காங்கிரஸில் அஜித்பவார் தலைமையிலான கோஷ்டி, ஆளும் பாஜக அரசில் இணைந்தது. அஜித்பவார் துணை முதல்வரானார்; இதர 8 என்சிபி எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அப்போதே முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கோஷ்டி இதை எதிர்த்தது. பின்னர் இலாகா ஒதுக்கீடு விவகாரத்திலும் ஏக்நாத் ஷிண்டே பிரிவு கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரித்விராஜ் சவான், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆத்ரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் விரைவில் முடிவு எடுக்க இருக்கிறார். உச்சநீதிமன்றம் இது தொடர்பாக விதித்த 90 நாள் கெடு முடிவடைய உள்ளது. ஆகஸ்ட் 10-ந் தேதி வாக்கில் அனேகமாக ஏக்நாத் ஷிண்டே, அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்; அதனால் ஏக்நாத் ஷிண்டே தமது பதவியை பறிகொடுப்பார். அப்போது அஜித்பவார் புதிய முதல்வராவார் என தெரிவித்திருந்தார். பிரித்விராஜ் சவான் இப்படி திடவட்டமாக கூறியது மகாராஷ்டிரா அரசியலில் விவாதமாகி உள்ளது.

பிரித்விராஜ் சவானின் கருத்தை நிராகரித்த துணை முதல்வர் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், முதல்வர் பதவி குறித்து அஜித்பவாருக்கு எந்த உறுதிமொழியும் தரப்படவில்லை. அஜித்பவாரும் அது தொடர்பாக எந்த நெருக்கடியும் தரவில்லை. காங்கிரஸ் கட்சி வேண்டும் என்றே வதந்திகளை பரப்பிவிடுகிறது. மக்களைக் குழப்புகிற வேலையை காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும். அப்படி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அப்போது எம்.எல்.ஏக்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பார்கள் என்றார்.
பத்த வச்சிட்டியே பரட்டை!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications