தென் இந்தியாவுக்கு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை, கடலில் மர்ம படகுகள் கண்டெடுப்பு! அடுத்தடுத்து ஷாக்
Recommended Video
மும்பை: தென் இந்தியாவில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை தகவல்கள் ராணுவத்திற்கு கிடைத்துள்ள நிலையில், குஜராத்தின் சர் க்ரீக்கில் கைவிடப்பட்ட படகுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் கமாண்டோக்கள் கட்ச் பகுதி வழியாக இந்திய கடலுக்குள் ஊடுருவி, கடல் வழியைப் பயன்படுத்தி இனவாத மோதல்களைத் தூண்டுவதற்கு அல்லது பயங்கரவாத தாக்குதலை நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இந்தியாவின் தெற்குப் பகுதியில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்று பல எச்சரிக்கைகள் ராணுவத்தினருக்கு கிடைத்துள்ளன.
இந்த நிலையில் குஜராத்தின் சர் க்ரீக் பகுதியில் சில படகுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் யாருமே இல்லை என்று தெற்கு கமாண்டிங், பொது அதிகாரி எஸ்.கே.சைனி கூறியதாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ மேற்கோளிட்டுள்ளது.
இந்த நிலையில், கேரள காவல்துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட காவல்துறைத் தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது, குறிப்பாக கடலோரப் பகுதியில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications