நடுகாட்டுக்குள் பெண், மூன்று குழந்தைகள் பிணம்... மகாராஷ்டிராவில் பரபரப்பு!
மும்பை; மகராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 30 வயதுடைய பெண், அவரது 3 குழந்தைகள் அடர்ந்த காட்டுக்குள் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவர்கள் நான்கு பேரும் செப்டம்பர் மாதம் மாயமானது தெரியவந்தது. இந்த சம்பவம் அறிந்ததும் அந்த பெண்ணின் கணவர் தற்கொலைக்கு முயன்றார். அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மகராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டி தாலுகாவில் பச்சப்பூரில் உள்ள காட்டில் ஒரு பெண், 3 குழந்தைகள் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இது குறித்து பட்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பிணமாக கிடந்த பெண் மற்றும் 3 குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் ரஞ்சனா பாங்ரி(30) என்பதும், பிணமாக கிடந்த ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தையும் அவருடைய பிள்ளைகள் என்பதும் தெரியவந்தது.அந்த குழந்தைகளுக்கு 6 முதல் 12 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இவர்கள் 3 பெரும் மாயமாகி விட்டதாக ஏற்கெனவே புகார் வந்துள்ளது போலீசாருக்கு தெரியவந்தது.
சுமார் இரன்டு மாதங்கள் கழித்து நான்கு பேரும் பிணமாக மீட்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் அந்தப் பெண்ணின் கணவர் ஸ்ரீபத் பாங்ரி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயும், மூன்று குழந்தைகளும் காட்டு பகுதிக்கு ஏன் சென்றார்கள்? அவருக்கும் கணவருக்கும் தகராறு இருந்ததா? அவர்களை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications