பீமா கோரேகான் வழக்கு: பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி உடல்நிலையை ஆய்வு செய்ய மும்பை ஹைகோர்ட் உத்தரவு
மும்பை: பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமியின் உடல்நிலையை ஆய்வு செய்ய மருத்துவர் குழுவை அமைக்க வேண்டும் என்று மும்பை ஜேஜே மருத்துவமனை டீனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலேயர்களுக்கும் மராத்தியர்களுக்கும் இடையிலான போரின் 200வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது மிகப் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இதற்கு முன்னதாக சனிவர் வாடாவில் எல்கர் பரிஷத் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட பல சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பீமா கோரேகான் வன்முறை வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) சமூக செயற்பாட்டாளர்களான வரவர ராவ், ஆனந்த் டெல்டும்ப்டே உள்ளிட்ட ஏராளமானோரை கைது செய்தது. இவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டம் பாய்ந்தது.
பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி கடந்த ஆண்டு, பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டேன் ஸ்வாமி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக செயல்பட்டு வருகிறார். 84 வயதான ஸ்டேன் ஸ்வாமி கைது செய்யப்பட்டு மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. சிறையில் ஸ்டேன் ஸ்வாமியின் உடல்நிலை பாதிக்கபட்டது.
இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமியின் உடல்நிலையை ஆய்வு செய்ய ஒரு மருத்துவர் குழுவை அமைக்க வேண்டும் என்று மும்பை ஜேஜே மருத்துவமனைக்கு உத்தரவிட்டது; மேலும் இன்று ஜேஜே மருத்துவமனைக்கு ஸ்டேன் ஸ்வாமியை அனுப்ப வேண்டும் என்று சிறை நிர்வாகத்துக்கும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேபோல் பீமாகோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் கொரோனா மற்றும் கறுப்பு பூஞ்சை பாதிப்புக்குள்ளான டெல்லி பேராசிரியர் ஹனிபாபுவை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கவும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2020-ம் ஆண்டு பேராசிரியர் ஹனிபாபு கைது செய்யபட்டார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications