முதியவர்களை அப்படியே விட்டுவிட முடியாது.. மாற்று வழிகளை யோசியுங்கள்... மும்பை ஹைகோர்ட் காட்டம்
மும்பை: வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் முறையை அனுமதிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய மும்பை உயர் நீதிமன்றம், முதியவர்களுக்கு இதுபோல தடுப்பூசி செலுத்துவது குறித்து பரிசீலனை செய்யும்படி வலியுறுத்தியது.
இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. அனைவரும் கொரோனா தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
இந்நிலையில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் படுத்த படுக்கையாக உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட அனுமதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, தடுப்பூசி அதிகளவில் வீணாக வாய்ப்பு உள்ளது, தடுப்பூசி மாசுடைய உள்ள வாய்ப்பு, தடுப்பூசி செலுத்திய பிறகு நோயாளிகளைக் கவனிக்க முடியாமல் போகும் ஆகிய காரணங்களாலே வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்தது.
இந்தக் காரணங்களைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதிகள், இதற்கு ஒரு தீர்வு இருக்க வேண்டும். வயதானவர்களை அரசு அப்படியே விட்டுவிட முடியாது. இது இரண்டு மோசமான விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது போன்றது. ஆம்புலன்சில் ஐ.சி.யு வசதி உள்ளது, எனவே, அதில் நிச்சயமாக ஒரு தடுப்பூசிகளை வைக்க குளிர்சாதனப் பெட்டியை வைக்க முடியும்.
குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருவரும் சுயமாகச் செயல்படக்கூடிய நிலையில் இல்லாதவர்கள். எனவே நாம் தான் அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். வயதானவர்களை அப்படியே உயிரிழக்க விட்டுவிட முடியாது. மத்திய அரசு மீண்டும் வல்லுநர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
இஸ்ரேல் போன்ற நாடுகளில் பெரும்பாலானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. அமெரிக்காவிலும் காரில் இருந்தபடியே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாமும் நம்மை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்றனர்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications