மாடல் அழகிகளுக்கு போலீசிடமே ரேட்.. 'விபச்சாரம் பிசினஸ்'.. பிரபல நடிகை அதிரடியாக கைது
மும்பை: மும்பையில் காஸ்டிங் டைரக்டரும், பிரபல நடிகையுமான ஆர்த்தி மிட்டல் மாடல் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தியாக கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு மாடல் அழகிகளை மும்பையின் கோரேகானில் இருந்து மீட்ட போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தொடர்ந்து நடிகை ஆர்த்தி மிட்டலிடம் விசாரித்து வருகிறார்கள்.
மும்பையில் பிரபல நடிகையும், காஸ்டிங் டைரக்டருமான ஆர்த்தி மிட்டல் 'பரசுராம்' உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில் ஆர்த்தி மிட்டல் மாடல் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரி மனோஜ் சுதா தலைமையில் ஒரு சிறப்பு படையினை போலீசார் அமைத்தனர்.
அவர்கள் மாறுவேடத்தில் ஆர்த்தியை அணுகி இரண்டு நண்பர்களுக்கு இரண்டு மாடல் அழகிகள் தேவை என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு நடிகை ஆர்த்தி மிட்டல் கேட்டாராம்.

அதனை தொடர்ந்து டம்மி வாடிக்கையாளர்கள் போல் கோரேகானிற்கு சென்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இருக்கிறார்கள். இதையடுத்து அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு மாடல் அழகிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்த போலீசார், அவர்களிடம் முன்னதாக விசாரித்தனர்.

விசாரணையில் தங்களுக்கு தலா ரூ.15,000 தருவதாக நடிகை ஆர்த்தி மிட்டல் உறுதியளித்ததாக மாடல் அழகிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் மாடல்களை ஆர்த்தி மிட்டல் விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாகவும் அவர்கள் போலிசிடம் கூறியிருக்கிறார்கள். இதை தொடர்ந்து ஆர்த்தி மிட்டலை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications