அரபிக்கடலில் உருவாகும் "தேஜ்".. மும்பையை சுருட்டப்போகும் சூறாவளி புயல்.. ரெட் அலர்ட்.. கவனம்
மும்பை: அரபிக் கடலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய கடல் பகுதியில் வெப்பமண்டல புயல் உருவானால் தேஜ் என்று அழைக்கப்படும் என ஏற்கனவே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது அதன்படி இந்த புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு: தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடல் பகுதியில் திங்கள் கிழமை காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் கணித்திருந்தது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

சூறாவளி புயல்: இதனை தொடர்ந்து இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்றும் பின்னர் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்கள் புயலுக்கான முக்கிய நாட்களாக பார்க்கப்படுவதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தேஜ் புயல்: இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழை காலத்திற்கு பிந்தைய காலத்தில் உருவாகும் முதல் புயல், இந்த தேஜ் புயல் ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டு, பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் அரபிக்கடலில் வெப்பமண்டல புயல் எதுவும் உருவாகவில்லை. ஆனால் அதே நேரத்தில் வங்கக்கடலில் சித்ராங் மற்றும் மாண்டூஸ் என இரண்டு வெப்பமண்டல புயல்கள் உருவானது.
இந்த ஆண்டு அரபிக்கடலில் உருவாகும் சூறாவளி புயலின் ஆரம்ப அறிகுறிகளை வானிலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த சூறாவளி புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது தேஜ் புயல் மும்பையை குறி வைத்து உருவாகி வருகிறது. இந்த புயல் அதிகன மழையை தரக்கூடும் என்பதால் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பையை சுருட்டும்: அக்டோபர் 21 ஆம் தேதி தேஜ் புயல் இந்தியாவின் மும்பையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், தேஜ் புயல் கடுமையான சூறாவளி புயலாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கத் தொடங்கும் போது மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் இந்திய வானிலை மையம் வலியுறுத்தியுள்ளது.
மீனவர்கள் கவனம்: தேஜ் புயல் தாக்கம் காரணமாக மகாராஷ்டிர மாநில வானிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் இந்திய வானிலை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications