நான் நடிகன்னா என்னை பாதிக்காதா என்ன? தக்காளியை குறைத்துக் கொண்டேன்.. தர்பார் புகழ் சுனில் ஷெட்டி
மும்பை: தக்காளியின் விலை உயர்வு காரணமாக தக்காளி சாப்பிடுவதை நான் குறைத்துக் கொண்டேன் என நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. அதனால் விலையும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து பல இடங்களில் தக்காளி விலை கிலோ ரூ 150 வரை உயர்ந்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் கிலோ 10, 20 க்கு உதைப்பட்டுக் கொண்டிருந்த தக்காளி விலை அதிகரித்துள்ளது ஏழை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தக்காளி விற்பனை செய்யும் விவசாயிகள் தற்போது லட்சாதிபதியாகி வருகிறார்கள்.

வட மாநிலத்தில் தக்காளியை ரூ 38 லட்சத்திற்கு விவசாயி ஒருவர் விற்பனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தக்காளி விலை தங்கத்தை போல் உயர்ந்துவருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலை விட விலை உயர்ந்துள்ளது. இதனால் வீடுகளில் தக்காளியின் பயன்பாடு குறைந்துள்ளது. சில இடங்களில் தவிர்க்கப்பட்டும் வருகிறது.
அது போல் ஹோட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி ரசம், தக்காளி சட்னி, இவையெல்லாம் கிடைப்பதில்லை. இவ்வளவு ஏன் வெளிநாட்டு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தையும் இந்த விலை உயர்வு கடுமையாக பாதித்துள்ளது. அதனால் தக்காளி சாஸ் இனி கிடையாது என அறிவித்துள்ளனர்.
இந்த விலை உயர்வு ஏழை மக்களை மட்டுமல்லாமல் பணக்காரர்களையும் பாதித்துள்ளதாகவே கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த விலை உயர்வு தன்னை பாதித்துள்ளதாக நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகரான அவர் தமிழில் 12 பி, தர்பார், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தக்காளி விலையுயர்வால் தக்காளி சாப்பிடுவதை குறைத்துக் கொண்டதாக தெரிவிக்கிறார். இதுகுறித்து சுனில் ஷெட்டி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது எங்கள் வீட்டு கிச்சனிலும் எதிரொலிக்கிறது. இதனால் நான் அண்மைக்காலமாக தக்காளி சாப்பிடுவதை குறைத்துக் கொண்டேன்.
நான் நடிகன் என்பதால் தக்காளியின் விலை என்னை பாதிக்காது என யாரும் நினைக்க வேண்டாம். நாங்களும் இந்த விலை உயர்வு பாதிப்பை எதிர்கொள்கிறோம். நான் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறேன். அந்த ஹோட்டலில் சமைக்கும் உணவின் சுவையிலும் தரத்திலும் தக்காளி விலை உயர்வு காரணமாக சமரசம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. காய்கறிளையும் பழங்களையும் உணவு செயலிகள் மூலமே ஆர்டர் செய்கிறேன். அதன் விலை தெரிந்தால் அதிர்ச்சியாவீர்கள் என சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications