Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிராமணர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அனுராக் காஷ்யப்! பூலே திரைப்பட சர்ச்சையில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

மும்பை: ‛பூலே' திரைப்படம் தொடர்பான விவகாரத்தில் பிராமணர்கள் குறித்த அவதூறாக கமெண்ட் செய்த நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் மன்னிப்பு கேட்டுள்ளார். பிராமணர்கள் குறித்து அனுராக் காஷ்யப் என்ன கூறினார்? இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‛பூலே'. இந்த திரைப்படம் என்பது ஜோதிபா பூலே - சாவித்ரி பூலே ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது. இவர்கள் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்த்திருத்தவாதிகள் ஆவார்கள். இவர்கள் ஜாதி மற்றும் பாலின பாகுபாட்டை ஒழிக்கும் நோக்கில் செயல்பட்டனர்.

director-and-actor-anurag-kashyap-has-issued-public-apologises-for-brahmin-remark

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதீக் காந்தி, காதாநாயகியாக பத்ரலேகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திரைப்படம் ரிலீசாகவில்லை.

இதற்கு திடீரென எழுந்த சர்ச்சை தான் காரணம். அதாவது இந்த திரைப்படத்தில் பிராமணர் சமுதாயத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி, வசனங்கள் இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. இந்த திரைப்படத்துக்கு அகில பாரதிய பிராமண சமாஜ் மற்றும் பரஸ்ராம் ஆர்திக் விகாஸ் மகாமண்டல் உள்ளிட்ட பல அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சென்சார் போர்டு சில காட்சி மற்றும் வசனங்களை நீக்க கூறியது. இதனால் இந்த திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வரும் 25ம் தேதி இந்த திரைப்படம் என்பது திரைக்கு வர உள்ளது.

இதுதொடர்பாக hereotherside என்ற பெயர் கொண்ட ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்தார். அதில், ‛‛பிராமணர்கள் உங்களுக்கெல்லாம் தந்தை. அவர்களுடன் நீங்கள் எவ்வளவு மோதுகிறீர்களோ அவ்வளவு எரித்து விடுவார்கள்'' என்று கூறினார். இதற்கு இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யம், ‛‛நான் பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன். உனக்கு எதுவும் பிரச்சனை இருக்கா?'' என்று அதில் கமெண்ட் செய்தார். இதுதொடர்பாக ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது. அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக பிராமணர்கள் கோபமடைந்தனர். பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்களை அவர் அவமானப்படுத்திவிட்டதாக கொதித்தனர்.

மேலும் பலரும் அனுராக் காஷ்யப் மட்டுமின்றி அவரது குடும்பத்துக்கும் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அனுராக் காஷ்யப் திடீரென்று மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "இது எனது மன்னிப்பு. எனது பதிவிற்காக அல்ல. நீக்கப்பட்ட ஒருவரிக்கும், வெறுப்புணர்வை ஏற்படுத்தியதற்கும் தான். சன்ஸ்கார் ராஜாக்களிடம் இருந்து மகள், குடும்பம், நண்பர்கள், உடன் பணியாற்றுவோருக்கு பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல்கள் வருகிறது.

வார்த்தைகளை சொல்லியபிறகு அதனை திரும்ப எடுக்க முடியாது. நானும் கூறிய வார்த்தைகளை திரும்ப பெறமாட்டேன். ஆனால் உங்களுக்கு அவதூறு பரப்ப வேண்டும் என்றால் நேரடியாக என்னிடம் மோதுங்கள். எனது குடும்பத்தினர் உள்பட மற்றவர்களிடம் வேண்டாம். ஏனென்றால் அவர்கள் எதையும் பேசவில்லை.

மன்னிப்பை தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இதுதான் என்னுடைய மன்னிப்பு. பிராமணர்களே தயவுசெய்து பெண்களை விட்டு விடுங்கள். மனுஸ்மிருதி உள்பட அனைத்து வேதங்களும் கண்ணியத்தை கற்பிக்கின்றன. நீங்கள் உண்மையில் எந்த வகையான பிராமணர்கள் என்பதை நீங்களே முடிவு எடுத்து கொள்ளுங்கள். நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+