நீரவ் மோடி,மெஹூல் சோக்ஸியின் ரூ1,350 கோடி மதிப்பு ஆபரணங்கள்- 108 பெட்டிகள்-அமலாக்கத்துறை பரபர தகவல்
மும்பை: வங்கி கடன் மோசடி வழக்கில் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர்கள் நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸிக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து ரூ1,350 கோடி மதிப்பிலான ஆபரணங்கள், 108 பெட்டிகளில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
Recommended Video
பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர்கள் நீரவ் மோடியும் அவரது உறவினரான மெஹூல் சோக்ஸியும். ரூ13,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் இருவரும் வெளிநாடு தப்பிச் சென்றனர்.

லண்டனில் பதுங்கி இருந்த நீரவ் மோடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மெஹூல் சோக்ஸி ஆன்குடிவா நாட்டில் பதுங்கி இருக்கிறார். இருவருக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களை மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது.
இந்த நிறுவனங்களில் இருந்து ரூ1350 கோடி மதிப்பிலான வைரங்கள், தங்கம், முத்து உள்ளிட்ட ஆபரணங்கள் இந்தியாவுக்கு கொன்டுவரப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆபரணங்கள் 2018-ம் ஆண்டு துபாயில் இருந்து ஹாங்காங்கில் இயங்கி வந்த நீரவ் மோடி அண்ட்கோவின் நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தற்போது ஹாங்காங்கில் இருந்து இவை அனைத்தும் மும்பைக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டன. மொத்தம் 108 பெட்டிகளில் இந்த ஆபரணங்கள் எடுத்து வரப்பட்டன. இதில் 32 பெட்டிகள் நீரவ் மோடிக்கு சொந்தமானவை; எஞ்சியவை மெஹூல் சோக்ஸிக்கு உரியவை என்கின்றன அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள்.
இதேபோல் முன்னரும் துபாய், ஹாங்காங்கில் இருந்து 33 பெட்டிகளில் இருவருக்கும் சொந்தமான ஆபரணங்களை அமலாக்கப் பிரிவினர் கொண்டுவந்தனர். அவற்றின் மதிப்பு ரூ137 கோடி எனவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications