யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் வீட்டில் விடிய விடிய அமலாக்கத்துறை ரெய்டு.. அழைத்துச் சென்று விசாரணை
மும்பை: யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல், ரெய்டு நடத்தினர். இதையடுத்து, அமலாக்கத்துறை தங்கள் அலுவலகம் அழைத்துச் சென்று, ராணா கபூரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
யெஸ் வங்கி, கடன்களை வாரி வழங்கியதால் வாரா கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் சிக்கியது அந்த வங்கி. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன்வசப்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி யெஸ் வங்கிக்கு சில காலம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. வாடிக்கையாளர்கள் யெஸ் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். அவசர தேவைகளுக்கு மட்டும் சலுகைகள் உண்டு என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல் ரெய்டு நடத்தினர். பல நிறுவங்களுக்கு கடன் வழங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. காலை வரை ரெய்டு தொடர்ந்தது. ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்கு பதிவு செய்தது.
வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு பிறகு, ராணா கபூரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச்சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணா கபூர் காலத்தில்தான் அதிக வராக் கடன்கள் கொடுக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications