மகாராஷ்டிரா சட்டசபை சிவசேனா குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை சிவசேனாவின் குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏக்நாத் ஷிண்டே, ஆதித்யா தாக்கரே, சுபாஷ் தேசாய் இன்னும் சற்று நேரத்தில் மாநில ஆளுநர் கோஷ்யாரியை சந்திக்க உள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 105 இடங்களில் பாஜகவும் 56 இடங்களில் சிவசேனாவும் வென்றன. இரு கட்சிகளும் இணைந்து புதிய ஆட்சி அமைக்க முடிவு செய்தன.

ஆனால் சரி சமமான அதிகாரப் பகிர்வு வேண்டும் என்கிறது சிவசேனா. இதை பாஜக நிராகரித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில் நேற்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை குழுவின் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே மும்பையில் இன்று சிவசேனா எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டசபை சிவசேனா குழுவின் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஏக்நத் ஷிண்டே, ஆதித்யா தாக்கரே, சுபாஷ் தேசாய் ஆகியோர் சற்று நேரத்தில் மாநில ஆளுநர் கோஷ்யாரியை சந்திக்க உள்ளனர்.
இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு தொடருகிறது.












Click it and Unblock the Notifications