மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் 15 நாளுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது.. சரத் பவார் ஆருடம்
மும்பை: மக்களவை தேர்தலுக்கு பின் மோடி தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தாலும், அந்த ஆட்சி 13 முதல் 15 நாட்களுக்குள் கவிழ்ந்துவிடும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆருடம் கூறியுள்ளார்.
மராத்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அவர், மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு எதிர்பார்த்ததைவிட கூடுதல் இடங்கள் கிடைக்கும் என கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகளின்படி தேசிய ஜனநாயக கூட்டணி தேவைப்படும் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறாவிட்டாலும் கூட, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மீண்டும் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுப்பார் என சரத் பவார் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று மோடி ஆட்சி அமைத்தாலும் கூட, கடந்த 1996-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு ஏற்பட்ட நிலைதான் மோடிக்கும் ஏற்படும். 13 முதல் 15 நாட்களுக்குள் மோடி அரசு கவிழ்ந்து விடும். பாரதிய ஜனதாவிற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணி மே 21-க்குள் இறுதிவடிவம் பெற்றுவிடும் என்றார் சரத்பவார்.
பாரதிய ஜனதாவிடம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை வழங்க நாட்டு மக்கள் விரும்பவில்லை. மறைந்த ராஜீவ் காந்தி பற்றி மோடி தெரிவித்த கருத்துக்களால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.
பா.ஜ தலைவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக தேர்தலில் 300 இடங்கள் கிடைக்கும் என்று பேசி வருகிறார்கள். இவ்வாறு பேசுவதன் மூலம் மக்களை மட்டுமல்லாது, அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா எதிர்பாராத தோல்வியை சந்திக்கும். 8 மாதங்களுக்கு முன் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பறி கொடுத்தது போலவே மத்தியிலும் ஆட்சியை பாரதிய ஜனதா பறிகொடுக்கும் என சரத் பவார் தெரிவித்துள்ளார்
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications