தாலி கட்டிக் கொள்ள தயாரான மகள்! தந்தை செய்த மிகக் கோவலமான செயல்! இப்படி எல்லாம் கூட நடக்குமா..?
மும்பை : மகராஷ்டிரா மாநிலம் புனே அருகே தனது 14 வயது மகளுக்கு திருமணம் செய்ய முயற்சித்ததோடு, அவரை 3 மாதங்களுக்கும் மேலாக பலமுறை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 68 வயது தந்தையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக மகராஷ்டிரா, அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த மாநிலங்களுக்கு அடுத்தபடியாக ராஜாஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் மைனர் சிறுமிகளுக்கு வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றனர்.

அதிர்ச்சி சம்பவம்
2020ஆம் ஆண்டில், நாட்டிலேயே அதிக பலாத்கார வழக்குகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தரும் தகவலை சமீபத்தில் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் மட்டும் 5,310 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ராஜஸ்தானை தொடர்ந்து உத்தரபிரதேசம் 2,769 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. அடுத்ததாக மொத்தம் 2,339 வழக்குகளுடன் மத்தியப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக மகராஷ்டிரா மாநிலம் புனே அருகே தனது தனது 14 வயது மகளை 3 மாதங்களுக்கும் மேலாக பலமுறை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் 68 வயது தந்தையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 18 முதல் மார்ச் 3ஆம் தேதி வரை தனது 14 வயது மகளை பலமுறை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் புதன்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.

கொலை மிரட்டல்
ஹடப்சர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திகாம்பர் சொன்டக்கே இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "தன் செயல்கள் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று அந்த நபர் தனது மகளை மிரட்டியுள்ளார். ஆனாலும், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன் தாயிடம் கூறியதை தொடர்ந்து அவளுடைய பெற்றோருக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் அந்த நபர் தனது மனைவியையும் தாக்கியுள்ளார். சமீபத்தில், இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தன் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்த போது இது குறித்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தந்தை கைது
இது குறித்து காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தனது மனைவி வீட்டில் இல்லாத போது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியதாகவும், பலமுறை அவரை தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications