என்சிபி தலைவர் பாபா சித்திக் சுட்டு கொலை! மகராஷ்டிராவில் பெரும் பரபரப்பு! 3 பேரை கைது செய்து விசாரணை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவருமான பாபா சித்திக் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக மூன்று பேரை கைது செய்து மகாராஷ்டிரா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸில் முக்கிய சக்தியாக வளம் வந்தவர் பாபா சித்திக், மகாராஷ்டிரா பொருத்தவரை காங்கிரஸின் பலம் பொருந்திய இஸ்லாமிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசில் அமைச்சர் பதவியை வகித்த அவர் கட்சியிலும் ஆட்சியிலும் மிகவும் பிரபலமான நபராக அறியப்பட்டார்.
சுமார் 48 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பயணித்த அவர் மக்களிடையேயும் கட்சியினர் இடையேயும் பெரும் செல்வாக்கு பெற்றவர். குறிப்பாக ஆண்டுதோறும் மும்பையில் இப்தார் விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதில் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிற கட்சி பிரமுகர்களை கலந்து கொள்ள வைத்ததன் மூலம் சமூக நல்லிணக்க தலைவராகவும் ஈடுபட்டார்.
குறிப்பாக கொரோனா காலத்தில் அவரது பணிகள் மக்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (அஜித் பவர்) இணைந்தார். இந்த நிலையில் மும்பையில் சனிக்கிழமை இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த பாபா சித்திக் மீது திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் பாபா சித்திக் படுகொலை மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த மகராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சித்திக்கின் படுகொலை செய்தியை கேட்ட மகாராஷ்டிரா உள்துறை அமைச்சரும் துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அவர் அனுமதிக்கப்பட்ட லீலாவாடி மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். தற்போது கொலை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications