Nisarga: ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மும்பை.. குறைந்த பாதிப்புகளுடன் புயலில் இருந்து தப்பியது எப்படி?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் அலிபாகில் நேற்று கரையை கடந்த நிசர்கா புயலால் 3 பேர் பலியாகிவிட்டனர். மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் அது எதிர்பார்த்ததை விட சற்று குறைவான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா தொற்று நோயால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயை கட்டுப்படுத்தும் முயற்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் நிசர்கா புயல் பீதியை கிளப்பியது.
இது தீவிர புயலாக மாறியதை வைத்தும் இது கரையை கடக்கும் விதம், வேகம் ஆகியவற்றை வைத்தும் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தை புரட்டி போட்டது போல் இந்த நிசர்கா புயல் மகாராஷ்டிரத்தை ஒரு வழி செய்யும் என கருதப்பட்டது.

மகாராஷ்டிரா
மும்பையின் தென்கிழக்கு பகுதியில் 75 கி.மீ. தூரத்தில் நேற்று கரையை கடந்தது. அப்போது மகாராஷ்டிரா கடலோரத்தில் புயல் காற்றும் கனமழையும் பெய்தது. ரத்னகிரிக்கு அருகில் புயலின் கண் இருந்ததால் அந்த மாவட்டத்திலும் ராய்காட் மாவட்டத்திலும் கடல் அலைகள் 6 முதல் 8 அடி வரை உயர்ந்தன. ரத்னகிரியில் நேற்று காலை முதல் 38 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மின் தடை
ராய்காட்டின் அலிகார் மற்றும் பால்கர் மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள தகடால் ஆன கூரைகள் பறந்தன. மரங்கள் வேரோடும், மின் கம்பங்கள் முழுவதுமாகவும் சாய்ந்தன. ராய்காட், பால்கர், தானே மற்றும் புனே ஆகிய மாவட்டங்களில் 25 லட்சத்திற்கு மேற்பட்ட பயன்பாட்டாளர்களுக்கு மின் தடை செய்யப்பட்டது.

வலுவிழந்தது
கொங்கன் ரயில் தண்டவாளம் வழியாக கேரளாவையும் மும்பையையும் டெல்லியையும் இணைக்கும் 4 தொலைதூர ரயில்கள் திருப்பிவிடப்பட்டன. ராய்காட்டில் ட்ரான்ஸ்பார்மர் விழுந்து 58 வயது நபர் ஒருவர் பலியானார். புனே மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்து 65 வயது மூதாட்டியும் 52 வயது நபரும் பலியாகிவிட்டனர். மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் மகாராஷ்டிரா கடலோரத்தில் கரையை கடந்த நிசர்கா நேற்று இரவு 9 மணிக்கு வலுவிழந்தது.

தப்பிய மும்பை
மும்பைக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த புயலில் இருந்து மும்பை தப்பியது. காற்றின் திசை வடகிழக்கு பக்கம் வீசியதால் எதிர்பார்த்ததைவிட பாதிப்பு குறைவாகவே இருந்தது. இதனால் இந்த புயலில் இருந்து மும்பை தப்பியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications