எளிதாக கிடைக்கும் லோன்கள்... அதிகரிக்கும் வீட்டுமனை விற்பனை... தரவுகள் கூறுவது என்ன!
மும்பை: கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிப்பில் இருந்தாலும் நாட்டில் மும்பை உள்பட சில பெரு நகரங்களில் வீட்டு மனை விற்பனை அதிகரித்து உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
வங்கிகள், நிதி நிறுவனங்களில் வீட்டு கடன்களும் அதிகரித்து விட்டதாக கூறப்பட்டுளது. வீட்டு விற்பனை நிறுவனங்கள் விலையை குறித்து வழங்குவதால் விற்பனை அதிகரித்து காணபடுகிறது என தெரிகிறது.

உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது பொருளாதாரம் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வந்தாலும், முழுமையாக முன்னேற்றம் அடையவில்லை.இந்த இக்கட்டான காலத்திலும் நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீட்டு மனைகள் விற்பனை அதிகரித்து உளளதாக தகவல்கள் தரவுகள் கூறுகின்றன. வீட்டுக்கான லோன்கள் எளிதாக கிடைப்பதால் வீட்டு மனைகள் விற்பனை அதிகரிக்க காரணம் என கூறப்படுகின்றன.
நைட் ஃபிராங் என்ற நிறுவனத்தின் தரவுகளின்படி மும்பை நகரத்தில் வீட்டு விற்பனை அக்டோபரில் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருந்ததாக கூறியுள்ளது. ஜூன் மாத இறுதியில், மும்பையில் வீட்டு விற்பனை விலைகள் 2018 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் இருந்ததை விட 0.45 சதவீதம் குறைவாக இருந்ததாக மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொந்த வீடு என்பது இந்தியாவில் பாதுகாப்பாகவும், அடையாளமாகவும், கவுரவமாகவும் பார்க்கப்படுவதாலும் அரசு, தனியார் வங்கிகள், இதர நிதி நிறுவனங்கள் மூலம் லோன்கள் எளிதாக கிடைக்கும் வகையில் இருப்பதால் வீட்டு மனைகள் விற்பனை அதிகரித்து வருகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அக்டோபரில் அதிக அளவு வீட்டுக் கடன்கள் வழங்கி உள்ளதாக தரவு கூறுகின்றன. தொழில்துறை மற்றும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்வதோடு வீடுகளை கட்டி கொடுக்கும் இந்திய கூட்டு நிறுவனத்தின் புதிய பிரிவான கோத்ரேஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், கடந்த மாதம் தனது அடமான சலுகையை தொழில்துறையில் மிகக் குறைந்த கட்டணத்துடன் அறிமுகப்படுத்தியது.
நாட்டின் ஒட்டுமொத்த கடன்கள் 0.5 சதவீதமாக சுருங்கியிருந்தாலும், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வீட்டுக் கடன்கள் 2.6 சதவீதம் அதிகரித்துள்ளன என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.நாட்டின் வங்கிகளில் ஒட்டுமொத்தமாக மோசமான கடன்கள் மார்ச் மாதத்திற்குள் இரண்டு தசாப்தங்களாக 12.5 சதவீத கடனாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆண்டுகளில் இந்தியாவில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறைந்த வட்டி விகிதங்கள் அளிக்கின்றன. வீட்டு மனை விற்பனை நிறுவனங்கள் சலுகை விலையில் பல்வேறு வசதிகளுடன் வீட்டு மனைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இது நுகர்வோர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.இந்தியாவில் 10 பெரிய நகரங்களில் வீட்டு மனை விற்பனை விலை என்பது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது 35 சதவீதமாக குறைந்து உள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications