மகாராஷ்டிராவுக்கு புதிய சோதனை.. திடீரென 200 கேரளா செவிலியர்கள் ராஜினாமா- பணிச்சுமை காரணமாம்!
மும்பை: மகாராஷ்டிராவில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்த கேரளாவை சேர்ந்த 200 செவிலியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த மாநிலம் சென்றிருப்பது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த செவிலியர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணிபுரிகின்றனர் செவிலியர்கள்.

மேற்கு வங்கம்- வடகிழக்கு செவிலியர்கள்
ஆனால் வடகிழக்கு மாநில செவிலியர்கள் இனப் பாகுபாடுடன் நடத்தப்படுவது மேற்கு வங்கத்தில் அதிகரித்தது. இந்த கொடுமைக்கு முடிவுகட்டும் வகையில் 600க்கும் அதிகமான வடகிழக்கு மாநில செவிலியர்கள் பணிகளை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பினர். இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிராவுக்கு குழு
தற்போது மகாராஷ்டிரா மாநிலமும் இதேபோல் ஒரு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராதான் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது. மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகம். மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்த கேரளாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் தேவை என அம்மாநில அரசு கோரிக்கை விடுத்தது. இதனடிப்படையில் 50 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

செவிலியர்கள் ராஜினாமா
இன்னொரு புறம் புனே, மும்பை மாநகரங்களில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்த செவிலியர்கள் 200க்கும் அதிகமானோர் தங்களது பணிகளை ராஜினாமா செய்துவிட்டனர். இவர்கள் அனைவருமே கேரளாவுக்கு திரும்பிவிட்டனர். இதனால் புனே, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன.
Recommended Video

பணிசுமை முக்கிய காரணம்
கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்தே செவிலியர்களுக்கான பணிச்சுமை மிக அதிகரித்துவிட்டது. ஓய்வு இல்லாமல் தொடர்ந்து மருத்துவமனைகளிலேயே தங்கி பணிபுரிய வேண்டிய நெருக்கடிக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். அத்துடன் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வந்தது. இதனால் கொரோனாவின் பிடியில் இருந்தும் பணிச்சுமையில் இருந்தும் விடுபட தங்களது சொந்த மாநிலமான கேரளாவுக்கே செவிலியர்கள் திரும்பிவிட்டனர். இந்த இக்கட்டான நிலைமையை எதிர்கொள்வது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications