மகாராஷ்டிராவுக்கு புதிய சோதனை.. திடீரென 200 கேரளா செவிலியர்கள் ராஜினாமா- பணிச்சுமை காரணமாம்!
மும்பை: மகாராஷ்டிராவில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்த கேரளாவை சேர்ந்த 200 செவிலியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த மாநிலம் சென்றிருப்பது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த செவிலியர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணிபுரிகின்றனர் செவிலியர்கள்.

மேற்கு வங்கம்- வடகிழக்கு செவிலியர்கள்
ஆனால் வடகிழக்கு மாநில செவிலியர்கள் இனப் பாகுபாடுடன் நடத்தப்படுவது மேற்கு வங்கத்தில் அதிகரித்தது. இந்த கொடுமைக்கு முடிவுகட்டும் வகையில் 600க்கும் அதிகமான வடகிழக்கு மாநில செவிலியர்கள் பணிகளை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பினர். இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிராவுக்கு குழு
தற்போது மகாராஷ்டிரா மாநிலமும் இதேபோல் ஒரு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராதான் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது. மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகம். மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்த கேரளாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் தேவை என அம்மாநில அரசு கோரிக்கை விடுத்தது. இதனடிப்படையில் 50 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

செவிலியர்கள் ராஜினாமா
இன்னொரு புறம் புனே, மும்பை மாநகரங்களில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்த செவிலியர்கள் 200க்கும் அதிகமானோர் தங்களது பணிகளை ராஜினாமா செய்துவிட்டனர். இவர்கள் அனைவருமே கேரளாவுக்கு திரும்பிவிட்டனர். இதனால் புனே, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன.
Recommended Video

பணிசுமை முக்கிய காரணம்
கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்தே செவிலியர்களுக்கான பணிச்சுமை மிக அதிகரித்துவிட்டது. ஓய்வு இல்லாமல் தொடர்ந்து மருத்துவமனைகளிலேயே தங்கி பணிபுரிய வேண்டிய நெருக்கடிக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். அத்துடன் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வந்தது. இதனால் கொரோனாவின் பிடியில் இருந்தும் பணிச்சுமையில் இருந்தும் விடுபட தங்களது சொந்த மாநிலமான கேரளாவுக்கே செவிலியர்கள் திரும்பிவிட்டனர். இந்த இக்கட்டான நிலைமையை எதிர்கொள்வது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications