பாஜக-சிவசேனா மோதலுக்கு மத்தியில்.. மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு.. சிக்கியது பல கோடி!
மும்பை: பாஜக மற்றும் சிவசேனா இடையே ஆட்சி விஷயத்தில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் மும்பை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் கணக்கில் வராத 735 கோடி ரூபாய்க்கான நிதி முறைகேடுகளை கண்டுபிடித்தனர்.
மகாராஷ்டிராவில் யார் தலைமையில் ஆட்சி அமைப்பது என்ற விவகாரத்தில் பாஜக சிவசேனா இடையே மோதல் முற்றியது.இதன் காரணமாக கூட்டணி முறிந்து போன நிலையில், சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க தயாராகி வருகிறது. இதனால் மகாராஷ்டிராவில் பரபரப்பு நிலவுகிறது.

இந்த சூழலில் மும்பை மாநகராட்சியில் டெண்டர்களை எடுத்து கட்டிடங்கள் மற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததார்களின் வீடுகளில் வருமான வரித்துறை ஒரே நேரத்தில் நவம்பர் 6ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது.
பிரிஹன்மும்பை மாநகாட்சி ஒப்பந்ததாரர்களை குறிவைத்து மும்பை மற்றும், சூரத் உள்பட 37 இடங்களில் அவர்களின் வீடுகள் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் ஐடி ரெய்டு நடந்தது.
இந்த சோதனையில் 735 கோடி ரூபாய் நிதிமுறைகேடுகளை இதுவரை கண்டுபிடித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சில ஒப்பந்ததார்கள் கடன் வாங்கியது போல் கணக்கு காட்டியதும், சிலர் செலவு கணக்குகளை அதிக அளவில் உயர்த்திகாட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி ஆகியவற்றுக்கான பெரிய அளவிலான ஆதாரங்கள் உள்ளதாக நேற்று மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications